Monday, November 10, 2014

க‌ட‌ந்த‌ கால‌ம்

எழுதத் தொடங்கி
பின்
பாதியில் அழித்த‌
கவிதைகளிலிருந்து
ஒரு வார்த்தைத் தப்பித்து
ஒரு பெருமரமாய்
இன்று வளர்ந்து நிற்கிறது.
ஆசைகள்,
கோபங்கள்,
அனுதாபங்கள்,
தனிமை,
அச்சம்,
ஆற்றாமை,
இன்னும் பலவும்
கிளைத்திருக்கின்ற‌ன‌.
எல்லா கிளைக‌ளிலும்
ப‌ச்சை பசேலென இலைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பழங்கள்
அதில் தொங்கும் பறவைகள்…
இன்று
பார்க்க‌
அழகாய்த்தான் உள்ளது
என் க‌ட‌ந்த‌ கால‌ம்

No comments:

Post a Comment