எனக்காக எப்போதும் வரும்
இந்த நிலவிடம்
எனக்கொரு காதலும் இல்லை
தேடித் தேடி வந்த போதிலும்
இறகில்லா பறவையைக் காண்பதில்
எனக்குத் துளி விருப்பமுமில்லை
எல்லோரும் கூடடைந்தபின்
இந் நிலவோடு
தனித்திருக்கும் தருணங்களை
நான்
ஒருபோதும் விரும்பியதில்லை
வீடில்லாக் கூறைமேல்
வேண்டாத விருந்தாளி
No comments:
Post a Comment