என் எல்லா கதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கவிதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கனவுகளையும்...
உன்னிடம் சொல்கிறேன்
எல்லாம் ஒருநாள்
தீர்ந்து போய்விடுகின்றன
பின்
எல்லாவற்றிர்க்கும்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்
ஒரு சிறிய இடைவெளியில்
அப்புள்ளியிலிருந்து மை கசிகிறது
ஒரு கோட்டைக் கிழிக்கிறது
அக்கோட்டை
இழுத்து இழுத்து
உன் முகம் வரைகிறேன்
அதைப் பார்த்து
ஒரு கவிதை பாடுகிறேன்
பின்
அது பிறந்த கதையை
உன்னிடம் கூறுகிறேன்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கவிதைகளையும்
உன்னிடம் சொல்கிறேன்
என் எல்லா கனவுகளையும்...
உன்னிடம் சொல்கிறேன்
எல்லாம் ஒருநாள்
தீர்ந்து போய்விடுகின்றன
பின்
எல்லாவற்றிர்க்கும்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்
ஒரு சிறிய இடைவெளியில்
அப்புள்ளியிலிருந்து மை கசிகிறது
ஒரு கோட்டைக் கிழிக்கிறது
அக்கோட்டை
இழுத்து இழுத்து
உன் முகம் வரைகிறேன்
அதைப் பார்த்து
ஒரு கவிதை பாடுகிறேன்
பின்
அது பிறந்த கதையை
உன்னிடம் கூறுகிறேன்
காதலில்
காற்புள்ளிக்கும்
முற்றுப்புள்ளிக்கும்
ஒரே வேலை....
காற்புள்ளிக்கும்
முற்றுப்புள்ளிக்கும்
ஒரே வேலை....
No comments:
Post a Comment