காற்று
எங்கெங்கும்... எப்பொழுதும்...
Saturday, June 6, 2015
சற்று நேரத்திற்குப் பின்
எதேச்சையாக கண்டுகொண்டது
தான் அமர்ந்திருப்பது
ஒரு பூவின்மீதென்று
பின்
பழைய நியாபகத்தில்
எதையோ தேடத்தொடங்கியது
அந்த வண்ணத்துப்பூச்சி
யாருக்கு முத்தம்
மழையின் ஈரத்தை வாங்கி
உனக்குப் பரிசளித்தப் பின்
தருவதற்கு
என்னிடம்
இந்த வறண்ட வார்த்தைகளே
மீதமுள்ளன
இப்பொழுது
எங்கள் மூவரில்
யாருக்குத் தரப்போகிறாய்
உன் முத்தத்தை
என்பதை
நீயே முடிவுசெய்துகொள்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)