தன் புண்ணியங்களுக்கு
தன் வெற்றிகளுக்கு
தன் தோல்விகளுக்கு
தன் ஆசைகளுக்கு
தன் நிராசைகளுக்கு
தன் சிரிப்பிற்கு
தன் அழுகைக்கு
தன் வாழ்விற்கு
தன் சாவிற்கு
கடவுளைக்
கை காட்டியவன்
சாத்தான்
அதைப் பரப்பியவன்
உலகின்
முதல் அரசியல்வாதி
No comments:
Post a Comment