Tuesday, October 25, 2016

சாத்தானின் குழந்தைகள்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது குழந்தைகளுக்கு
சீனித் தண்ணியில்
கடவுளின் ரத்தத்தைக்
கலந்து கொடுக்கிறோம்

கடவுளின்
சதையைப் பிய்த்து தின்று
ஞானம் பெறுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது
பிதாவின் ராஜ்ஜியத்தில்
அவரின் வீடுகளை
இடித்துத் தள்ளி
தெருவில் தள்ளுகிறோம்
பின்னர் சிறைப்பிடித்து
சிலுவையில் ஏற்றுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

ரத்தம் குடிக்கும் நாம்
தூமை தீட்டென்கிறோம்
கொலை செய்த நாளை
புனிதமாக்குகிறோம்

நாம்
சாத்தானின் குழந்தைகள்

நமக்கு
அது
விலக்கப்பட்ட கனி என்று
நன்றாகத் தெரியும்

அதை
உண்டதுதான்
இதுவரை
நாம் தீட்டியதிலேயே
ஆகப் பெரிய‌
சதித்திட்டம்

சாத்தனிற்கு
தோத்திரம்

ஆமென்!









Thursday, October 13, 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு - 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர் பாப் டைலன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இளையராஜா ஒரு மேடையில் இசையுடன் சேரும்போதுதான் பாடல் வரிகள் உயிர் பெறுகின்றன என்பதைப் பாடல் வரிகளை மட்டும் தனியாகச் சொல்லிக்காட்டுவார் (சொல்லிக்காட்டும்போதே மொக்கையா இருக்குல்ல என்பதுபோல் இருக்கும் அவர் சொல்லும் தொனி) பின் தன் ட்யூனோடு சேர்த்துப் பாடிக்காட்டுவார்.. இப்ப எப்படி இருக்கு என்று அவர் கேட்க்கும்போது கூட்டம் கைத்தட்டும்.

என்னைப் பொறுத்தவரை பாடல்கள் என்றால் அதில் பாடல் வரிகள்தான் முக்கியம் அல்லது இரண்டுமே முக்கியம். தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு கலாச்சாரம் தொடங்கியபின் எத்தனையோ குத்துப்பாட்டுக்கள் வந்திருக்கின்றன. அவற்றில் எத்தனைப் பாடல்கள் காலத்தால் அழியாமல் நிற்கின்றன. அதே சமயம், இன்றும் நாம் செந்தமிழ் தேன் மொழியாளை ரசிக்கிறோமே.... அதற்கு வரிகள்தான் முக்கிய காரணம் இல்லையா..

சரி விசயத்திற்கு வருவோம். பாப் டைலனின் பாடல்கள் இவ்வளவு பிரசத்தி என்றால் அவர் வரிகளுக்கு இசை அமைத்தவர்களுக்கு விருதில் பங்கில்லையா? ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக தேசிய விருது கொடுக்கப்பெற்றபோது பரத்வாஜ் அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்.

பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பது தெரியாது. விக்கிபீடியாவில் இசையைப் பற்றி எதுவும் போடவில்லை என்பதால் அதைப் பிறர்தான் செய்வர் என்று யூகிக்கிறேன்.

டைலனிற்கு கொடுக்கப்பட்டதற்கு ஆதரித்து எதிர்த்தும் எழுதப்பட்டிருந்த பதிவுகளில் அவரின் பல பாடல்கள் பொயட்ரிதான் என்றும் அவர் காலம் முழுவதும் போர்களுக்கு எதிராக பாடியவர் என்றும் ஆதிரிப்போர் குறிப்பிடுகின்றனர். எதிர்ப்போர் அவர் பாடல்கள் எப்படி இலக்கியத்திற்குள் வருகின்றன என்று கேட்க்கின்றர்.

எனக்கு இசை என்பது மன அமைதி கொள்ள வைப்பது மட்டுமே. பாடல்கள் என்றால் அதோடு வார்த்தைகள் சேர வேண்டும். இவ்வளவுதான் என் இசை ரசனை. இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதன் கதவுகளை திறக்க காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருக்கிறேன். நிலமை இப்படியிருக்க இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஒரு பாடகர்/பாடலாசிரியருக்கு கொடுக்கிறார்கள் என்றால் என்னத்தைத்தான் புரிந்துகொள்வது :(

சில அடிப்படைக் கேள்விகள்:

*போர்களுக்கு எதிராக பாடினார் என்றால் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் ஏன் இலக்கியத்திற்கு கொடுக்க வேண்டும்.

* அவர் பாடல்களில் இருப்பது கவித்துவமான வரிகளா? அல்லது அவை கவிதைகளா?

* விக்கிபீடியாவில் அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று போட்டிருக்கிறார்கள். ஆர்ட் லிட்ரேச்சர்க்குள் வருகிறதா?

* இந்தியாவில் இருந்து எப்பொழுது ஒருவர் வாங்கப் போகிறார். :)

Sunday, October 2, 2016

தற்கொலை

தற்கொலை செய்துகொள்வது
என்று முடிவெடுத்தப் பின்
வழக்கமான வழிகளில்
நான் போக விரும்பவில்லை
தூக்கிட்டுக்கொள்வதோ
ஓடும் ரயிலின் முன் பாய்வதோ
எல்லோரும் செய்வது
நிச்சயமாய்
தீவைத்துக்கொள்ளக்கூடாது
மின்சார வயர்களை
எப்படிக் கடிப்பதென்று தெரியாது
ஆற்றில் குதிப்பதென்பது
வழக்கொழிந்துபோன முறை
ஒன்று செய்யலாம்
குறியை அறுத்துவிட்டு
அங்கு ஓர் கோட்டைக் கிழித்துக்கொண்டு
தெருவில் இறங்கி
நடந்து செல்லலாம்
மற்றவற்றை
வேட்டை
மிருகங்கள் பார்த்துக்கொள்ளும்...