நாம்
சாத்தானின்
குழந்தைகள்
நமது குழந்தைகளுக்கு
சீனித் தண்ணியில்
கடவுளின் ரத்தத்தைக்
கலந்து கொடுக்கிறோம்
கடவுளின்
சதையைப் பிய்த்து தின்று
ஞானம் பெறுகிறோம்
நாம்
சாத்தானின்
குழந்தைகள்
நமது
பிதாவின் ராஜ்ஜியத்தில்
அவரின் வீடுகளை
இடித்துத் தள்ளி
தெருவில் தள்ளுகிறோம்
பின்னர் சிறைப்பிடித்து
சிலுவையில் ஏற்றுகிறோம்
நாம்
சாத்தானின்
குழந்தைகள்
ரத்தம் குடிக்கும் நாம்
தூமை தீட்டென்கிறோம்
கொலை செய்த நாளை
புனிதமாக்குகிறோம்
நாம்
சாத்தானின் குழந்தைகள்
நமக்கு
அது
விலக்கப்பட்ட கனி என்று
நன்றாகத் தெரியும்
அதை
உண்டதுதான்
இதுவரை
நாம் தீட்டியதிலேயே
ஆகப் பெரிய
சதித்திட்டம்
சாத்தனிற்கு
தோத்திரம்
ஆமென்!
No comments:
Post a Comment