Sunday, October 2, 2016

தற்கொலை

தற்கொலை செய்துகொள்வது
என்று முடிவெடுத்தப் பின்
வழக்கமான வழிகளில்
நான் போக விரும்பவில்லை
தூக்கிட்டுக்கொள்வதோ
ஓடும் ரயிலின் முன் பாய்வதோ
எல்லோரும் செய்வது
நிச்சயமாய்
தீவைத்துக்கொள்ளக்கூடாது
மின்சார வயர்களை
எப்படிக் கடிப்பதென்று தெரியாது
ஆற்றில் குதிப்பதென்பது
வழக்கொழிந்துபோன முறை
ஒன்று செய்யலாம்
குறியை அறுத்துவிட்டு
அங்கு ஓர் கோட்டைக் கிழித்துக்கொண்டு
தெருவில் இறங்கி
நடந்து செல்லலாம்
மற்றவற்றை
வேட்டை
மிருகங்கள் பார்த்துக்கொள்ளும்...

No comments:

Post a Comment