Monday, April 20, 2015

பக்கத்து வீட்டு மரங்கள்…

மழையில் நனைந்த பின்
தலை துவட்டிக் கொள்ளும்
என்னைப் பார்த்து
சிரிக்கின்றன
பக்கத்து வீட்டிலிருக்கும்
மரங்கள்
அவைகளின் வாயையை
அடைக்க ஒரு கவிதையை
எழுதி வீசினேன்
மடக்கி மடக்கி
எழுதப்பட்ட அதைப்பார்த்துச்
சத்தமாய் சிரிக்கின்றன
ஒரே யடியாய்
வளர்ந்திருக்கும் அவைகள்!

மனம்

என் வாழ்வின்
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்
நேற்றுப் பிறந்த‌
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது
அதை இழுத்துவந்து
முன்பை விட‌
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்
வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த‌ ஒற்றை
வார்த்தை

பிறழ்வு

இனி முடியாதென
பேசத் தொடங்குகிறது
மௌனம்
உள்ளிழுக்கப்பட்ட
மூச்சிற்கு
திரும்ப
வழியில்லை
எங்கிருந்தோ
விழுந்து தெறிக்கிறது
உயிரின் பேரருவி
கண்களிலிருந்து
ஒழுகுவதன்
மருஊ
கண்ணீர்
அக்கணமே
உயிருடன்
வெடித்துச் சிதறுகிறது
நான்
அதற்கு முன்
ஒரு குயிலின் கூவலை
கேட்கக் கடவது
என்றென்னைச்
சபித்தது யார்

Sunday, April 12, 2015

பின் நவீனத்துவ தற்கொலை

வீடு முழுவதும்
புத்தகங்கள்
கவர் பிரிக்கப்படாமல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஒரு இருபத்தியேழு
அவை மூச்சு முட்டி
இறந்து கொண்டிருக்கின்றன – நான்
புத்தகங்கள் தாசிகளைப் போன்றவை
தொடத் தொடத்தான்
அவை உயிர் வாழும் – நண்பன்
இதை
நான் ஒரு கவிதையாகவும்
அவன்
ஒரு கதையாகவும்
எழுதத்தொடங்கினோம்
அப்பொழுது
ஷெல்ப்பின் மேலிருந்து
ஒரு புத்தகம்
கீழே விழுந்தது
நாங்கள்
தற்கொலை என்று
பெயர் வைத்தோம்

மனம்

என் வாழ்வின்
ஆகச் சிறந்த நாளை
சில வார்த்தைகளுக்குள்
அடைத்து வைத்திருந்தேன்

நேற்றுப் பிறந்த‌
சில வார்த்தைகளின் மூலம்
அது
எப்போதோ
தப்பிவிட்டிருந்தது
தெரிய வந்தது

அதை இழுத்துவந்து
முன்பை விட‌
பிரம்மாண்டமான வார்த்தைகளுக்குள்
சிறை வைக்கப் பார்க்கிறேன்

வெகு சுலபமாய்
தப்ப வைத்துக்கொண்டே
இருக்கிறது
அந்த‌ ஒற்றை
வார்த்தை