Monday, April 20, 2015

பக்கத்து வீட்டு மரங்கள்…

மழையில் நனைந்த பின்
தலை துவட்டிக் கொள்ளும்
என்னைப் பார்த்து
சிரிக்கின்றன
பக்கத்து வீட்டிலிருக்கும்
மரங்கள்
அவைகளின் வாயையை
அடைக்க ஒரு கவிதையை
எழுதி வீசினேன்
மடக்கி மடக்கி
எழுதப்பட்ட அதைப்பார்த்துச்
சத்தமாய் சிரிக்கின்றன
ஒரே யடியாய்
வளர்ந்திருக்கும் அவைகள்!

No comments:

Post a Comment