Saturday, May 24, 2014

புனைப் பெயர்

கவிதை எழுதும் எனக்கு
ஒரு புனைப் பெயர் தேவை
காற்று என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என்னையே இன்னும்
கடந்து போகவில்லையென்பதால்
மழை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
என் கவிதைகள்
எல்லோர்க்குமானதல்ல என்பதால்
நிலவு என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
மறைந்து
மறைந்து
வாழும் நிலவென்பதால்
மலை என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அசைத்தலும்
முன் நகர்தலுமே
கவிதையென்பதால்
கடல் என்று
வைத்துக்கொள்ள நினைத்தேன்
குற்றவுணர்வு மேலெழுந்து தடுத்ததால்
என் பெயரையே
வைத்துக்கொள்ள நினைத்தேன்
அதுவும் சரிதான்.

No comments:

Post a Comment