Monday, May 26, 2014

உண்மை!

பெண்களுக்கான ஒரு கவிதையெழுதி
அவர்கள் உலகமனுப்பி வைத்தேன்

சிறிது நாட்கள் கழித்து
திரும்பி வந்த கவிதை
நிறையவே மாறிவிட்டிருந்தது

உதட்டுச் சாயம்
காதணிகள்
கழுத்தணிகள்
கொலுசு
மல்லிகைப் பூ
இவற்றுடன்
வெட்கமும்
சேர்ந்திருந்தது

பெருமிதத்துடன்
துள்ளிக்குதிக்கையில்
காலில் அடிபட‌
இரத்தம் சொட்டியது
அப்பொழுது வந்த‌
படபடப்பும்
பயமும்
சோர்வும்
ஓர் உண்மையை
புரியவைத்தன...



No comments:

Post a Comment