Sunday, July 27, 2014

கருப்பு

அங்கு ஒரு மரம்தான் இருந்தது
அம்மரத்தில்
ஒரு கிளைதான் இருந்தது
அக்கிளையில் ஒரு இலைதான் இருந்தது
அவ்விலை அருகே
ஒரு கருப்பு இருந்தது
தான் பறவையென்று
பறந்து காட்டியது
என்ன பறவை என்று
கரைந்து காட்டியது
இலை
போல் அசைந்தும் காட்டியது
சிலை
போல் இருந்தும் காட்டியது
ஏனோ
பார்த்தும் பார்க்காமலே போனான்
அந்த‌
புகைப்படக் கலைஞன்..

Sunday, July 13, 2014

ஈ_ம்

அந்த ஊரில்
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற‌
கோரங்களும்
வாழ்ந்தன‌
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
 

Thursday, July 10, 2014

…..இப்படியாய்:

…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
…..இப்படியாய்
எல்லாமும்
வழக்கொழிந்து போகும்
திரு நாளில்
இப்படியாய்:
சுழலத் தொடங்கும்
காலம்….

அவளின்றி...


வாழ்க்கை
மிக மிக
அருவருப்பாய் இருக்கிறது

உலகில் உள்ள
எல்லா விளக்குகளையும்
ஏற்றிய பின்னரும்
ஒழுகும் இரவு போல்
ஒழுகிக்கொண்டே இருக்கிறது
இந்த வலி

ஏமாற்றம் தான்...

அவள் மீதான
என் காதலில்
நூறில்
ஒரு பங்கு கூட இல்லை
இந்தலி

அவளை ஸ்பரிசிக்காமல்
உயிரற்றுக் கிடக்கும்
இந்ததேகம்
ஒரு க் குவியல் போல்
துர்நாற்றம் கொள்கிறது...

காற்று
ட்டுமே
என் க்கம்
ந்து போகிறது...

உடலென்னும்
புதைக்குழிக்குள்
உயிர்
சிக்கிக்கொண்டிருக்கிறது...

சாவுச் னியனே
எங்கு தொலைந்தாய்

இல்லை...

என்னில்
இனி
சாவற்கு
என்னமீதமிருக்கிறது!!!

Wednesday, July 9, 2014

எப்படியோ

எப்படியோ
ஆடு ஒன்று
பிறந்தது

எப்படியோ
ஒரு ஆடு
சட்டைப் போடக் கற்றுக்கொண்டது
ஒரு கலாச்சாரம் பிறந்தது

எப்படியோ
சட்டையில் இரு பித்தான்கள் தொலைந்தது
ஒரு கலாச்சாரம் பிறந்தது

எப்ப‌டியோ
ச‌ட்டையில் பித்தான்க‌ள் இல்லாம‌லான‌து
ஒரு க‌லாச்சார‌ம் பிற‌ந்த‌து

ம‌ழையிலோ
காற்றிலோ
எப்ப‌டியோ
ச‌ட்டையின் நிற‌ம் மாறிய‌து
ஒரு க‌லாச்சார‌ம் பிற‌ந்த‌து

எப்ப‌டியோ
ச‌ட்டை அவிழ்ந்து விழுந்த‌து

ஆடு பிற‌ந்த‌து

Thursday, July 3, 2014

காற்று

பூந்தோட்டத்தின் வழியாக‌
வந்தக் காற்று
களைப்புற்றிருந்தது
ஒவ்வொரு பூவும்
ஒரு கவிதை சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
சொல்ல சொல்லியிருக்கவேண்டும்
பட படவென அடித்திருக்கும்
இலைகள்
பல கதைகள் சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்கத்
துரத்தியிருக்க வேண்டும்
இல்லை
ஒவ்வொரு பூவின் மணத்தையும்
பிடித்திருக்கவேண்டும்

    ******
கடலை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
எது கடல்?
அலைகளா?
அதன் ஓயாத சத்தமா?
ஆழமா?
அதன்
அதீத மெளனமா?
மீன்களா?
மீனவர்களா?
மழையா?
நீலமா?
நீளமா?
காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..