வாழ்க்கை
மிக மிக
அருவருப்பாய்
இருக்கிறது
உலகில்
உள்ள
எல்லா விளக்குகளையும்
ஏற்றிய
பின்னரும்
ஒழுகும்
இரவு போல்
ஒழுகிக்கொண்டே
இருக்கிறது
இந்த வலி
ஏமாற்றம்
தான்...
அவள் மீதான
என் காதலில்
நூறில்
ஒரு பங்கு கூட இல்லை
இந்த வலி
அவளை ஸ்பரிசிக்காமல்
உயிரற்றுக் கிடக்கும்
இந்த தேகம்
ஒரு மலக்
குவியல் போல்
துர்நாற்றம் கொள்கிறது...
காற்று
மட்டுமே
என் பக்கம்
வந்து போகிறது...
உடலென்னும்
புதைக்குழிக்குள்
உயிர்
சிக்கிக்கொண்டிருக்கிறது...
சாவுச்
சனியனே
எங்கு தொலைந்தாய்
இல்லை...
என்னில்
இனி
சாவதற்கு
என்ன மீதமிருக்கிறது!!!
No comments:
Post a Comment