Sunday, July 13, 2014

ஈ_ம்

அந்த ஊரில்
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற‌
கோரங்களும்
வாழ்ந்தன‌
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
 

No comments:

Post a Comment