அந்த ஊரில்
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற
கோரங்களும்
வாழ்ந்தன
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
நாங்கள் வாழ்ந்தோம்
அதே ஊரில்
கொலைகளும்
படுகொலைகளும்
கண்ணீரும்
கதறல்களும்
வல்லுறவுகளும்
வல்லூறுகளும்
ரத்த வாய்க்கால்களும்
முள் வேலிகளும்
இன்னும் பிற
கோரங்களும்
வாழ்ந்தன
இன்று
அங்கு மீதமிருப்பது
கால் பரப்பிக் காத்திருக்கும்
காலமெனும் வேசை மட்டுமே
No comments:
Post a Comment