அங்கு ஒரு மரம்தான் இருந்தது
அம்மரத்தில்
ஒரு கிளைதான் இருந்தது
அக்கிளையில் ஒரு இலைதான் இருந்தது
அவ்விலை அருகே
ஒரு கருப்பு இருந்தது
தான் பறவையென்று
பறந்து காட்டியது
என்ன பறவை என்று
கரைந்து காட்டியது
இலை
போல் அசைந்தும் காட்டியது
சிலை
போல் இருந்தும் காட்டியது
ஏனோ
பார்த்தும் பார்க்காமலே போனான்
அந்த
புகைப்படக் கலைஞன்..
No comments:
Post a Comment