Sunday, July 27, 2014

கருப்பு

அங்கு ஒரு மரம்தான் இருந்தது
அம்மரத்தில்
ஒரு கிளைதான் இருந்தது
அக்கிளையில் ஒரு இலைதான் இருந்தது
அவ்விலை அருகே
ஒரு கருப்பு இருந்தது
தான் பறவையென்று
பறந்து காட்டியது
என்ன பறவை என்று
கரைந்து காட்டியது
இலை
போல் அசைந்தும் காட்டியது
சிலை
போல் இருந்தும் காட்டியது
ஏனோ
பார்த்தும் பார்க்காமலே போனான்
அந்த‌
புகைப்படக் கலைஞன்..

No comments:

Post a Comment