பூந்தோட்டத்தின் வழியாக
வந்தக் காற்று
களைப்புற்றிருந்தது
ஒவ்வொரு பூவும்
ஒரு கவிதை சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
சொல்ல சொல்லியிருக்கவேண்டும்
பட படவென அடித்திருக்கும்
இலைகள்
பல கதைகள் சொல்லியிருக்கவேண்டும்
இல்லை
பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்கத்
துரத்தியிருக்க வேண்டும்
இல்லை
ஒவ்வொரு பூவின் மணத்தையும்
பிடித்திருக்கவேண்டும்
******
கடலை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
எது கடல்?
அலைகளா?
அதன் ஓயாத சத்தமா?
ஆழமா?
அதன்
அதீத மெளனமா?
மீன்களா?
மீனவர்களா?
மழையா?
நீலமா?
நீளமா?
காற்று
மிகவும் களைப்புற்றிருந்தது..
No comments:
Post a Comment