அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி நடந்து வந்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி பேசினார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி சிரித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லாரும்
ஒரே மாதிரி காசு கேட்டார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி ஆசிர்வதித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் போனபின்
அங்கிருந்த எல்லாவற்றின் அர்த்தமும்
சற்றே
மாறித்தான் போயிருந்தது…
No comments:
Post a Comment