தோற்றுப்போன
என் காதலை
நான்
எப்போதோ
மறந்து போய்விட்டுருந்தேன்
என்பதை
அவன் காதலைப் பற்றி அவனும்
அவள் காதலைப் பற்றி அவளும்
சொல்ல
நினைவுக்கு வந்தது
அய்யோ என அலறியது மனம்
அவசர அவசரமாய்
ஒரு கதை எழுதுகிறேன்
கதை முழுவதும்
கண்ணீர் வடிக்கிறேன்
அவர்களிடம்
நான் கொட்டிய தண்ணீர்
குளமாயிற்று என்கிறேன்…
No comments:
Post a Comment