Thursday, July 2, 2015

    அந்த ஊரில் இருந்த
    கடைசி வேப்ப மரமும்
    கடைசிப் புளிய மரமும்
    வெட்டப்பட்டப் பின்னர்
    அவற்றிலிருந்தப் பேய்களைப்...
    பிடித்து வந்து
    கருணையுள்ளம் கொண்ட நான்
    என் கவிதை வேலிகளுக்குள்
    அடைத்து வைத்தேன்
    பின்னர்
    கருணையுள்ளம் கொண்ட
    நான்
    பக்கத்து ஊரில்
    மரமிழக்கும்
    பேய்களுக்காக
    உண்ணாவிரதமிருக்கச்
    சென்றேன்
    அப்பொழுதொரு காகம்,
    கடைசி மரமும்
    வெட்டப்பட்டப் பின்
    கடைசி மலையும்
    தகர்க்கப்பட்டப் பின்
    கடைசி ஆறும்
    வற்றியப் பின்
    கடைசி மனிதனும்
    தற்கொலைச்
    செய்துகொண்டப் பின்
    இந்த பூமி
    நிம்மதியாய்
    கடைசி மூன்று
    சுற்றுகளைச் சுற்றும்
    என்று கரைந்தது
    கருணையுள்ளம் கொண்ட
    நான்
    அக்காகத்திற்கு
    சிலை வைக்க வேண்டுமென
    உண்ணாவிரதத்தில்
    பேசினேன்...

No comments:

Post a Comment