Thursday, July 2, 2015

    மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த‌
    அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
    கடவுள்களின் ஆவிகள்
    ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
    எல்லா கடவுள்களின் பிணங்களையும்
    உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
    தணியாக் கோபத்துடன்
    அலைந்து திரிந்துகொண்டிருந்தன‌
    அந்த மரத்தின் வேர்கள்
    இதில்
    அவன் தவறு ஏதுமில்லையென்று
    கூடி நின்ற கூட்டத்திடம்
    அந்தக் கிளைக்காக‌
    கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
    இறக்குகையில்
    பிடி நழுவி
    விழுந்த
    அக்குழந்தைகளைப்
    பிடிக்க ஓடியவனை
    விரட்டிச் சென்றது
    ஒரு நாய்
    கடப்பாறைகள் இல்லையென‌
    நிம்மதிப் பெருமூச்சுடன்
    கலைந்து சென்றது கூட்டம்
    பாவம்
    பைத்தியம் பிடித்து
    அங்கேயே கிடக்கிறது
    மரம்....

No comments:

Post a Comment