Thursday, July 2, 2015

வீடு திரும்புதல்

    யாரோ
    எதற்கோ விடும்
    பெருமூச்சினில்
    நாம் நம்
    தொலைந்து போனக் கனவுகளை ...
    உள்ளித்துக் கொள்கிறோம்

    யாரோ
    ஒருவரின் தொடுதலில்
    சிலக் கனவுகளை
    மீண்டும் உணர்கிறோம்
    ஒரு சிலப் பயணங்கள்
    சிலக் கனவுகளிடம்
    கொண்டு சேர்க்கின்றன
    சில ஊர்களில்
    அவை
    நமக்காக
    எப்பொழுதும் காத்திருக்கின்றன
    யாரோ ஒருவரின்
    சிரிப்பினில்
    அழுகையில்
    வெற்றியில்
    தோல்வியில்
    ஏதோ
    சிலப் பெயர்களில்
    ஒரு மழை நாளில்
    ஒரு பின்னிரவில்
    எப்படியோ
    மீண்டு விடுகின்றன
    சிலக் கனவுகள்
    அல்லது
    கனவுகளாகிய
    ஆசைகள்
    சரியாய்ச் சொல்வதானால்
    கனவாய்ப் போன
    ஆசைகள்
    பின்
    தூக்க மென்பது
    வீடு
    திரும்புதல்

No comments:

Post a Comment