Monday, December 15, 2014

முத்தங்கள் மூன்று

அவள்
கடைசியாகத் தந்த
முத்தத்தைத்
தொலைத்துவிட்டுத்
தேடிக்கொண்டிருந்தேன்
நேற்று பெய்த மழை
தேடித் தந்தது
இன்று
தொலைப்பதற்கு
ஒரு முத்தமும்
தேடித்தர
ஒரு மழையும்
வேண்டும்..
#
எவ்வளவு ஆழத்தில்
விழுந்தாலும்
என்னை
மீட்டெடுக்கும்
இதழ்களைத் தொலைத்துவிட்டேன்
இப்பொழுது
நான் எங்கிருக்கிறேன்…!
#
நாம் முத்தமிட்டுக் கொள்ளும்பொழுதெல்லாம்
தனிமையைய உணர்வதில்லை யென
சொல்லிச் செல்கிறது
மழை!

No comments:

Post a Comment