Monday, December 15, 2014

வீடு

ஓடுகள் போய்
மாடிகள் ஆயிற்று
ஓர் வீடாய் இருந்ததைப்
பல அறைகளாய்ப் பிரித்தாயிற்று
ஜன்னல்கள் எல்லாவற்றிலும்
கண்ணாடிகள் பொருத்தியாயிற்று
துளசி மாடத்தைப்
படம் பிடித்து மாட்டியாயிற்று
விதவிதமான வண்ணங்கள்
அடித்தாயிற்று
கிரக பிரவேசத்திற்கு
எல்லோரும் வந்துவிட்டார்கள்
வாசலில்
முரண்டு பிடிக்கும்
இந்தப்
பசுவிற்கு மட்டும்
இடித்துக் கட்டப்பட்ட வீட்டை
ஆசிர்வதிப்பதில்
அவ்வளவு ஆர்வமில்லை போலும்..

No comments:

Post a Comment