Thursday, May 28, 2015

மரம்....

மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த‌
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன

எல்லா கடவுள்களின் பிணங்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன‌
அந்த மரத்தின் வேர்கள்

இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக‌
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை

இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்

கடப்பாறைகள் இல்லையென‌
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்

பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....





No comments:

Post a Comment