Monday, May 25, 2015

    என் நீள் கவிதையில்
    பல வார்த்தைகளைக் காணவில்லை
    அல்லது
    எழுதப்படவேயில்லை
    ...
    நம்பிக்கைகளால்
    நிரப்பப்பட்டிருக்கிறது
    என் கவிதை
    அல்லது
    அதுயென் நம்பிக்கை
    எல்லா வரிகளிலும்
    ஒரு வார்த்தை
    இடம் பெற்றிருக்கிறது
    அதுவும்
    கரிக்கிறது
    தண்டவளாமாகிப்போன வரிகளையும்
    என்னால்
    படித்து முடிக்க இயலாத
    நீ தந்த
    வரியையும் சேர்த்து
    எல்லாம் கரைந்து போன
    ஒரு மழை நாளில்
    நான் வாழத் தொடங்குகிறேன்
    அல்லது
    வாழ்ந்து முடிக்கிறேன்

No comments:

Post a Comment