ஒரு நாளை
பிடித்து
இரண்டாகக் கிழித்து
சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு
தூங்கப் போகிறேன்
விழித்துப்
பார்த்தால்
ஒன்று
பறந்து போயிருக்கும்…
சில விளையாட்டுகள்
அலுப்பதேயில்லை…
**********************
ஒவ்வொரு பகலிலும்
என் நிழலை
வெட்டி வீசுகிறேன்
அவை
இரவாய்
வளர்ந்து விடுகின்றன
யாரேனும்
என்னை
இந்தக் குழியிலிருந்து
தூக்கி விடுங்கள்…
*********************
துக்கத்தை
எழுதி வைக்கத்
தொடங்காதீர்கள்
அது
ஆற்று மணலின்
ஊற்று நீர் போல்
பிடித்து
இரண்டாகக் கிழித்து
சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு
தூங்கப் போகிறேன்
விழித்துப்
பார்த்தால்
ஒன்று
பறந்து போயிருக்கும்…
சில விளையாட்டுகள்
அலுப்பதேயில்லை…
**********************
ஒவ்வொரு பகலிலும்
என் நிழலை
வெட்டி வீசுகிறேன்
அவை
இரவாய்
வளர்ந்து விடுகின்றன
யாரேனும்
என்னை
இந்தக் குழியிலிருந்து
தூக்கி விடுங்கள்…
*********************
துக்கத்தை
எழுதி வைக்கத்
தொடங்காதீர்கள்
அது
ஆற்று மணலின்
ஊற்று நீர் போல்
மிகச் சுவையாய் இருக்கும்.
No comments:
Post a Comment