Sunday, September 21, 2014

பூ

செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது

மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது

முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது

ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்

பின்
அழகான பூவென‌

ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்

பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ

எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது

என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என‌
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது


No comments:

Post a Comment