செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது
மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது
முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது
ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்
பின்
அழகான பூவென
ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்
பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ
எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது
என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது
மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது
முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது
ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்
பின்
அழகான பூவென
ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்
பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ
எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது
என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது
No comments:
Post a Comment