ஆண்டு பனிரெண்ட் டில்ப்பூக்கும் பூவதன்
நீண்ட துயர மெதுவோ? – கண்ட
நுன் சிரிப்பில் காலம் மறந்தே
மலரும் மலரோ அது
நீண்ட துயர மெதுவோ? – கண்ட
நுன் சிரிப்பில் காலம் மறந்தே
மலரும் மலரோ அது
வெண்பா எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. முதன் முதலில் நான் எழுத ஆரம்பித்தது, பள்ளியில் ஆசிரியர் வெண்பா நடத்தும் பொழுது, அதைப் போலவே எழுத முயற்சித்ததுதான். முதல் மூன்று அடிகள் நான்கு சீர்களாகவும், ஈற்றடி மூன்று சீர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே நானறிந்த இலக்கணமாக இருந்தது. ஆனால் இன்று எழுத ஆரம்பித்த பின்புதான் வெண்பா அவ்வளவு விளையாட்டான விசயமில்லை என்று தெரிந்தது. எவ்வளவு முயற்சித்தும் தளை தட்டாமல் மேலுள்ள வெண்பா முழுமையடையவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு இடத்தில் தளை தட்டியுள்ளது. அதிகமாக இருந்தால் கூறவும்.
மேலும் நேரிசை வெண்பாவாய் எழுதப்பட்டிருக்கும் இது இரு விகற்பமாகவும் இல்லை. முதல் முயற்சியென்பதால் என்னை நானே மன்னித்துக்கொண்டு, மனம் தேற்றி எழுதி முடித்தேன்.
�
“பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவின் துயரம்தான் என்ன? உன் சிரிப்பைக் கண்டு காலம் மறந்து மலர்கிறதா அம் மலர் என்று பொருள் வருமாறு எழுதியுள்ளேன்.”
வருகிறதா?
No comments:
Post a Comment