Tuesday, September 9, 2014

பேஸ்புக் கவிதைகள்

ஒரு டஜன் ஜோடிகள்
உட்கார்ந்திருக்கும் பூங்காவில்
என்னை மட்டும் கடிக்கும்
கொசுவிற்கு
தனிமையென்றும்
நினைவு யென்றும்
பெயரிட்டு
விரட்டிக் கொண்டிருந்தேன்.

நான் உனக்கு அனுப்பும் கடிதங்கள் எல்லாம் என்னிடமே வந்து சேர்கின்றன.
நீ எங்கு இருக்கிறாய்?

பகல்
எல்லாவற்றையும் சத்தமாக சொல்கிறது.
கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கிறேன்
பகலின் மௌனம்
அதை விட
அதிகச் சத்தம் போடுகிறது.

No comments:

Post a Comment