Tuesday, September 9, 2014

நிழல் தேடிய நதி

அந்த அறையில்
நாங்கள் மட்டுமே இருந்தோம்
தனித்து விடப்பட்ட
நாங்கள்
அந்த அறையாகவே இருந்தோம்
பகலினில்
அவனுடன் மட்டும்
இரவினில் அவனாகவே…
கட்டித் தழுவ
கை நீட்டிய பொழுதெல்லாம்
கை பற்றி
மேலெழத் துடிக்கும்
தூரத்தில்
அவன்
சரிந்து சரிந்து
விழும் நதிக்கு
கடல்தான்
முட்டுச்சந்து
நீ
என்னுடையவன்
என்று நினைத்திருந்தேன்
உன் பெயர்
நிழல்
என்று தெரியும்வரை….

No comments:

Post a Comment