Tuesday, September 9, 2014

பெண்மை

நானொரு
பெண்
இதைச் சத்தமாய்ப்
படித்திடாதீர்கள்!

காலம்
கிழித்த‌
இடத்தி(தா)ல்
ஊசலாடுகிறது
என் உயிர்!

போதும்
இனி வேண்டாவென‌
முலைய‌றுத்து
என் யோனியை
அடைத்திட்டேன்

ம‌ற்றொன்றறுத்து
என் இடையினை
நிறைத்திட்டேன்

மயிர‌றுத்து
நிர்வான‌(ண‌)த்திற்கு
த‌ந்திட்டேன்

பெயர‌றுத்து
பிண‌ங்க‌ளுக்குப்
போட்டேன்

ஆங்கோர்
குழந்தை அழக் கண்டு
முலை(ளை)த்திடும் ம‌ன‌த்தை
என் செய்வேன்!!

No comments:

Post a Comment