நீ விட்டுச்சென்ற
நிழலின் மேல்
வட்டமடித்தது
கழுகு
படம் பிடிக்கத்தொடங்கியது
பாம்பு
நெருங்கிட முனைந்தது
பச்சோந்தி
கால் குறுக்கிக்கொள்
என்று கத்தியது
காகம்
எங்கிருந்தோ கொண்டுவந்து
சேலையைப் போர்த்தியது
காற்று
வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தது
புட்டம் பெருத்த
ஒரு கூட்டம்
பாவிப் பெண்ணே
அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்புடன்
உன் நிழலும்
பத்திரம்.
No comments:
Post a Comment