அம்மா
என்ற தலைப்பில்
கவிதைகள் எழுதினேன்
கதைகள் எழுதினேன்
சின்னத் திரையிலும்
பெரிய திரையிலும்
படங்கள் எடுத்தேன்
விருதுகள் வாங்கினேன்
வீட்டிற்கு வந்து
அடுப்படியில் இருந்த
அம்மாவிடம்
விருதுகளைக் காட்டிவிட்டு
அடுத்த வேளை
சாப்பாட்டிற்கு
"ஆர்டர்" கொடுத்தேன்...
No comments:
Post a Comment