எழுதி முடித்த கவிதைக்கு
விளக்கமெழுதி அனுப்பி வைத்தேன்
எதுகை மோனைப் பீ
என்று பதில் வந்தது
பீ யென்றெண்ணி
சாக்கடையில் வீசினேன்
பீ இல்லை
முத்தென்று
பன்றியொன்று
திருப்பித் தந்தது
முத்தெல்லாம்
கோர்த்து
மாலை செய்தேன்
பொக்கிஷமாகி
பெட்டிக்குள்
கிடக்கிறது
அடச் சீ..
இப்பொழுதுதான்
துர்நாற்றம் வீசுகிறது
No comments:
Post a Comment