Friday, June 13, 2014

ஒரு முட்டாளின் கவிதை

பாரதியும் புதுமைப்பித்தனும்
ஷெல்லியும்
இன்றும் அப்படியே இருக்கிறார்கள்
நாமும் சீக்கிரம்
செத்து விட வேண்டும்

தப்பான நிறத்தில்
வருகிறது
கண்ணீர்
துக்கதின் நிறம்
கருப்பன்றோ!

வீட்டிற்கு வீடு
மரம் வளர்க்காதீர்கள்
மயில் வளருங்கள்
மயில் ஆடும்பொழுதுதான்
மழை வருகிறது

ஒரு க‌ழுகின் காலில்
க‌விதையைக் க‌ட்டிவிடுங்க‌ள்
பின்
என் க‌விதை
மேலே மேலே மேல‌
போகிற‌தென்று க‌த்துங்க‌ள்

ஒவ்வொரு க‌விதையின் முடிவிலும்
ழ‌ள‌ல‌ழ‌ள‌லழழழழ
என்றெழுதுங்க‌ள்
யாரேனும்
அர்த்த‌ம் கேட்டால்
விட்ட‌த்தைப் பார்த்து சிரியுங்க‌ள்

No comments:

Post a Comment