பாரதியும் புதுமைப்பித்தனும்
ஷெல்லியும்
இன்றும் அப்படியே இருக்கிறார்கள்
நாமும் சீக்கிரம்
செத்து விட வேண்டும்
தப்பான நிறத்தில்
வருகிறது
கண்ணீர்
துக்கதின் நிறம்
கருப்பன்றோ!
வீட்டிற்கு வீடு
மரம் வளர்க்காதீர்கள்
மயில் வளருங்கள்
மயில் ஆடும்பொழுதுதான்
மழை வருகிறது
ஒரு கழுகின் காலில்
கவிதையைக் கட்டிவிடுங்கள்
பின்
என் கவிதை
மேலே மேலே மேல
போகிறதென்று கத்துங்கள்
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
ழளலழளலழழழழ
என்றெழுதுங்கள்
யாரேனும்
அர்த்தம் கேட்டால்
விட்டத்தைப் பார்த்து சிரியுங்கள்
No comments:
Post a Comment