மலை உச்சியின் மேலிருந்து
ஒரு பெரும் பள்ளத்தாக்கை
மூக்கின் நுனியில் அணிந்திருக்கும்
கண்ணாடி வழி பார்த்துக்கொண்டிருந்தேன்
அப்பொழுது யாரோ
ஒரு கயிரை வீசி
அப்பள்ளத்தாக்கை மேலே தூக்கத்தொடங்கினர்
எப்படியும் கண்ணாடி கண்ணருகே வந்துவிடுமென்பதால்
எனக்கு
இந்த வாழ்க்கையயும்
அந்தக் கயிரை வீசியவனையும்
பிடிக்கவேயில்லை.....
No comments:
Post a Comment