Saturday, June 7, 2014

காற்றிலும் நீந்தும் இம்மீன்கள்

முற்றத்தில் நின்றுகொண்டு
இரண்டு பெண்கள்
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
சிரித்துக்கொண்டார்கள்
பிறகு
பேசிக்கொண்டார்கள்
பிறகு
ஊட்டிக்கொண்டார்கள்
பிறகு
கட்டிக்கொண்டார்கள்
பிறகு
அழுதார்கள்
பிறகு
பேசிக்கொண்டிருந்தார்கள்
பிறகு
பிரிந்து சென்றார்கள்
பார்த்துக்கொண்டேயிருந்தது
ஆண்மை சிறைக்குள்
அடைப்பட்டிருக்கும்
என் கோழை மனம்…

No comments:

Post a Comment