மீதமிருக்கும்
கடைசி மரத்தின்
உச்சியில் அம்ர்ந்திருக்கும்
காவல் குரங்கு
என்ன சொன்னாலும் கீழிறங்குவதில்லை…
எதிர் வரும் பள்ளங்களைப் பற்றி
உடன் வரும் மீன்களுக்குச்
சொல்வதேயில்லை
ஓடும் நதி…
இருந்தும் தெரிந்து கொண்டு
தாவிக் குதித்தோடுகின்றன
மீன்கள்…
எப்பொழுதும் விழித்திருக்கும் கடலிடமிருந்து
மழையைக் கவர்ந்து செல்கின்றன
மேகங்கள்…
மீட்டுத் தருகிறது காற்று…
நம்மால் தான்
கவர்தலைத் தடுக்கவோ
காற்றைப் பார்க்கவோ முடிவதில்லை..
No comments:
Post a Comment