Tuesday, June 24, 2014

விடியாதே இரவே..

” நாளைக்கு”
அழையா விருந்தாளியாய் போகிறேன்
ஒவ்வொரு நாளும்…

********************

எந்த மொழியில்
எப்படி சொன்னால்
“நாளை”
வருவதை
நிறுத்தும்…

********************

“இன்று”
என்னைக் கொன்றுகொண்டிருக்கிறது
நாளை
எப்படியும் செத்துவிடுவோமென்ற நம்பிக்கையில்
நானும் செத்துக்கொண்டிருக்கிறேன்…

********************

முதுகில் குத்திப் போகிறது
“இன்று”
மார்பில் குத்தி
இழுக்கிறது
“நாளை”
புரூட்டஸ் “நேற்றோ”
கொல்லாமல்
கொல்கிறது

No comments:

Post a Comment