நான் ஒளித்து ஒளித்து
வைத்திருக்கும் பொருள்களுள்
மிகவும் விலை உயர்ந்தது
‘முத்தமிடவேண்டும்’என்ற ஆசை
முதன் முதலாய்
பார்த்த சினிமாவில்
வந்த முத்தமொன்று
ச்சீ.. ச்சீ என்று கண்ணை மூடிக்கொண்டவுடன்
எனக்குத் தெரியாமல்
என் சட்டைப் பையில்
வந்து ஒளிந்துகொண்டதாக நியாபகம்
பின்பு அதை
முழுக்கைச் சட்டையை
மடித்து விட்டுக்கொள்ளத் தொடங்கிய
ஒரு நாளில்
தற்செயலாய்க் கண்டுபிடித்தேன்
நன்றாகவே வளர்ந்திருந்தது,
நெற்றியிலிருந்து கன்னங்களுக்கும்
கன்னங்களிலிருந்து இதழ்களுக்கும்
அதை,
தனி அறைகள்
இல்லாத வீட்டில்
கவிதைகளில்
ஒளித்து வைக்கத் தொடங்கினேன்
முதற் காதல் நாட்களில்
என் தோட்டமெங்கும் பூத்த
ஒரே பூவது
இதழ்களால் எழுதப்போகும்
என் முதல்
காதல் கவிதைக்கான
தலைப்பை
தந்துகொண்டிருக்கும்
இம் மழைக்கு
நன்றி
Tuesday, October 28, 2014
“கடல்புரத்தில்”
குட்ரீட்ஸ் ரேட்டிங்: 5 நட்சத்திரங்கள் ( நண்பர்கள்
எல்லா இடத்திலும் இருப்பதால் ஒரே மாதிரியே எல்லா இடத்திலும் சொல்ல
வேண்டியிருக்கிறது{குட்ரீட்ஸ் தளத்தில் நண்பர்களாக இல்லாதவர்களுக்கு தனியாக ஒரு
பதிவு எழுதி வேறு ரேட்டிங் தருகிறேன்})
ஏன் 5 நட்சத்திரங்கள் என்று கேட்டால் குடுக்க வேண்டும் என்று தோன்றியது குடுத்தேன். என் ரேட்டிங் என் உரிமை
ஏற்கனவே உன் ரிவ்யூல content இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அதுக்காக சில வரிகள்:
ஆசிரியர் :வண்ணநிலவன்
பதிப்பகம் : நற்றினை
விலை : 90
பிடித்த விசயங்கள் : 112 பக்கங்கள் மட்டுமே இருப்பது
வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விடை ஒன்று எழுதவே இயலாது. நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கே, நம்ம வாழ்க்கைல நடந்தது மாதிரியே இதுலயும் வருதே என்று என்ன கூறினாலும் யாருடைய வாழ்க்கையும் இன்னொருவரது வாழ்க்கைப்போல் இருக்கவே முடியாது. ஒருவருக்கு யதார்த்தம் என்பது இன்னொருவருக்கு ஆச்சர்யமூட்டும்; ஒருவருக்கு அருவருப்பூட்டும் ; ஒருவருக்கு பயமூட்டும் ; ஒருவருக்கு யதார்த்தமாகவும் தெரியலாம். இவ்வாறு வெவ்வேறு எண்ணங்களைத்தரும் காட்சிகள் நிறைந்துள்ளதால் கடல்புரத்தில் என்னிடம் அதிகம் மணம் வீசுகிறது.
உதாரணத்திற்கு பிலோமி தன் தாய் பழகி வந்த வாத்தியாருடன் நாவலின் கடைசியில் பழகத்தொடங்குகிறாள். இருவரையுமே ஊர் தப்பாகப் பேசுகிறது. இதில் எது எதார்த்தம், எது அருவருப்பூட்டும், எது வியப்பூட்டும், எது பயமூட்டும் விசயமாகப் பார்க்கிறோம் என்பது படிப்பவர் மன நிலையைப் பொறுத்தது. எனக்கு எல்லாமே இருப்பதாகத் தோன்றுகிறது.ஊர் தப்பாகப் பேசுவது யதார்த்தம். பிலோமியின் வாழ்க்கைச் சூழலில் இருந்து வேறு ஒரு சூழலில் வாத்தியார் இருக்கிறார் என்று நினைத்தால் அவருடன் பழகுவதும் யதார்த்தம். தன் தாய் ஒருவருடன் பழகியிருக்கிறார்,அந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீது ஒரு மதிப்பு வந்து அவருடன் பழகுவது இயல்பு என்று நினைத்தால் அதுவும் யதார்த்தமே. இவ்வாறு ஒவ்வொரு எண்ணத்தையும் ஏற்றிப் பார்க்கலாம்.
பழகியப் பெண்ணை எல்லாம் முடிந்தவுடன் விட்டுச்செல்லும் ஒருவன், தாய் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவளின் பிரிவை நினைத்து வருந்தும் மகள், மனைவி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவள் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத கணவன், பணத்திற்காக வீட்டிற்கு வரும் பையன்,சபல எண்ணங்களுடன் இருக்கும் பக்கத்து வீட்டு ஆண், தொழிலில் பணத்தால் வரும் ஏற்றத்தாழ்வு, துரோகம் செய்யும் வேலைக்காரன், சொந்தவீட்டைப் பிரிய(ஊரையும்) முடியாமல் மனம் பிறழும் பெரியவர் ( இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1977. பல ஆண்டுகள் கழித்து வந்த ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பெரியவர் உயிரையே விட்டுவிடுவார்) என நமக்குத் தெரிந்த நிறையபேர் கடல்புரத்தில் இருக்கிறார்கள். நம்மால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளைத் தரும் மனிதர்களும் இருக்கிறார்கள்
எனக்கு இந்த ஊர் பிடித்திருந்தது. அடுத்தப் பயண அனுபவங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.
ஏன் 5 நட்சத்திரங்கள் என்று கேட்டால் குடுக்க வேண்டும் என்று தோன்றியது குடுத்தேன். என் ரேட்டிங் என் உரிமை
ஏற்கனவே உன் ரிவ்யூல content இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அதுக்காக சில வரிகள்:
ஆசிரியர் :வண்ணநிலவன்
பதிப்பகம் : நற்றினை
விலை : 90
பிடித்த விசயங்கள் : 112 பக்கங்கள் மட்டுமே இருப்பது
வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விடை ஒன்று எழுதவே இயலாது. நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கே, நம்ம வாழ்க்கைல நடந்தது மாதிரியே இதுலயும் வருதே என்று என்ன கூறினாலும் யாருடைய வாழ்க்கையும் இன்னொருவரது வாழ்க்கைப்போல் இருக்கவே முடியாது. ஒருவருக்கு யதார்த்தம் என்பது இன்னொருவருக்கு ஆச்சர்யமூட்டும்; ஒருவருக்கு அருவருப்பூட்டும் ; ஒருவருக்கு பயமூட்டும் ; ஒருவருக்கு யதார்த்தமாகவும் தெரியலாம். இவ்வாறு வெவ்வேறு எண்ணங்களைத்தரும் காட்சிகள் நிறைந்துள்ளதால் கடல்புரத்தில் என்னிடம் அதிகம் மணம் வீசுகிறது.
உதாரணத்திற்கு பிலோமி தன் தாய் பழகி வந்த வாத்தியாருடன் நாவலின் கடைசியில் பழகத்தொடங்குகிறாள். இருவரையுமே ஊர் தப்பாகப் பேசுகிறது. இதில் எது எதார்த்தம், எது அருவருப்பூட்டும், எது வியப்பூட்டும், எது பயமூட்டும் விசயமாகப் பார்க்கிறோம் என்பது படிப்பவர் மன நிலையைப் பொறுத்தது. எனக்கு எல்லாமே இருப்பதாகத் தோன்றுகிறது.ஊர் தப்பாகப் பேசுவது யதார்த்தம். பிலோமியின் வாழ்க்கைச் சூழலில் இருந்து வேறு ஒரு சூழலில் வாத்தியார் இருக்கிறார் என்று நினைத்தால் அவருடன் பழகுவதும் யதார்த்தம். தன் தாய் ஒருவருடன் பழகியிருக்கிறார்,அந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீது ஒரு மதிப்பு வந்து அவருடன் பழகுவது இயல்பு என்று நினைத்தால் அதுவும் யதார்த்தமே. இவ்வாறு ஒவ்வொரு எண்ணத்தையும் ஏற்றிப் பார்க்கலாம்.
பழகியப் பெண்ணை எல்லாம் முடிந்தவுடன் விட்டுச்செல்லும் ஒருவன், தாய் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவளின் பிரிவை நினைத்து வருந்தும் மகள், மனைவி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவள் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத கணவன், பணத்திற்காக வீட்டிற்கு வரும் பையன்,சபல எண்ணங்களுடன் இருக்கும் பக்கத்து வீட்டு ஆண், தொழிலில் பணத்தால் வரும் ஏற்றத்தாழ்வு, துரோகம் செய்யும் வேலைக்காரன், சொந்தவீட்டைப் பிரிய(ஊரையும்) முடியாமல் மனம் பிறழும் பெரியவர் ( இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1977. பல ஆண்டுகள் கழித்து வந்த ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பெரியவர் உயிரையே விட்டுவிடுவார்) என நமக்குத் தெரிந்த நிறையபேர் கடல்புரத்தில் இருக்கிறார்கள். நம்மால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளைத் தரும் மனிதர்களும் இருக்கிறார்கள்
எனக்கு இந்த ஊர் பிடித்திருந்தது. அடுத்தப் பயண அனுபவங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.
புல்வெளிதேசம்
புற்களின் மீது
நடப்பதுபோல்
சுகம் தருகிறது
தற்கொலை செய்துகொள்ளவேண்டும்
என்ற எண்ணம்
ஒவ்வொரு புல்லின்மீதும்
ஒரு துளிக் கண்ணீரை
வைக்க
அழகாய் இருக்கிறது
மரணத்தின் வாசல்
புற்களால்
பின்னப்பட்ட கயிற்றில்
தூக்கிட்டுக் கொள்ளவேண்டும்
ஒவ்வொரு மரணத்திற்கும்
ஒரு நிறமுண்டு
புல்லின் நிறம்
எனது
தற்கொலை எண்ணங்கள்
எப்பொழுதும் அழகானவை
அது
எல்லா மனிதர்களும்
ஒரு முறையேனும்
போய்வரும் புல்வெளிதேசம்!
நடப்பதுபோல்
சுகம் தருகிறது
தற்கொலை செய்துகொள்ளவேண்டும்
என்ற எண்ணம்
ஒவ்வொரு புல்லின்மீதும்
ஒரு துளிக் கண்ணீரை
வைக்க
அழகாய் இருக்கிறது
மரணத்தின் வாசல்
புற்களால்
பின்னப்பட்ட கயிற்றில்
தூக்கிட்டுக் கொள்ளவேண்டும்
ஒவ்வொரு மரணத்திற்கும்
ஒரு நிறமுண்டு
புல்லின் நிறம்
எனது
தற்கொலை எண்ணங்கள்
எப்பொழுதும் அழகானவை
அது
எல்லா மனிதர்களும்
ஒரு முறையேனும்
போய்வரும் புல்வெளிதேசம்!
…ல்லை
எனக்குப் பிடித்த விசயங்களைக்
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது
*~*
எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது
*~*
எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை
Tuesday, October 14, 2014
இம்மார்டல் ஸ்னேக்
என் அறையில்
சுற்றிக்கொண்டிருக்கிறது
பதிமூன்று வயது
பாம்பொன்று
தினமும் இரவில்
என்னை விழுங்கப் பார்க்கிறது
ஒவ்வொருமுறையும்
"இதெல்லாம் சகஞம்"
என்று கூறி தப்பித்து வருகிறேன்
ஆன்மிகத்தில்
இசையில்
இலக்கியத்தில்
விளையாட்டில்
தத்துவத்தில்
ஏதோ ஒன்றில்
தொலைந்தால் சரி
என்று பார்க்கிறேன்
ம்ஹும்...
நான் துப்பிய எச்சிலில்
பிறந்த பாம்பென்பதால்
இதுவரை
நானும் சாகவில்லை
அப்பாம்பும் சாகவில்லை
சுற்றிக்கொண்டிருக்கிறது
பதிமூன்று வயது
பாம்பொன்று
தினமும் இரவில்
என்னை விழுங்கப் பார்க்கிறது
ஒவ்வொருமுறையும்
"இதெல்லாம் சகஞம்"
என்று கூறி தப்பித்து வருகிறேன்
ஆன்மிகத்தில்
இசையில்
இலக்கியத்தில்
விளையாட்டில்
தத்துவத்தில்
ஏதோ ஒன்றில்
தொலைந்தால் சரி
என்று பார்க்கிறேன்
ம்ஹும்...
நான் துப்பிய எச்சிலில்
பிறந்த பாம்பென்பதால்
இதுவரை
நானும் சாகவில்லை
அப்பாம்பும் சாகவில்லை
Saturday, October 11, 2014
"நான் உனக்கு மட்டுந்தான்"
என்று நீ கூறிய இடத்தில்
என் ஆசைகள்
இன்று
ஆயிரம் விழுதுகள் விட்டு
வளர்ந்து நிற்கின்றன
நான்
அந்த வார்த்தைகளுடந்தான்
வாழ்ந்து வருகிறேன்
உன்னோடு
எல்லாமும் போய்விட்டன...
இந்த உயிர் மட்டும்
அந்த வார்த்தைகளுக்கிடையில்
எங்கோ
ஒளிந்து கொண்டுவிட்டது
ஒரு முறை
நான் தொட்ட
உன் கன்னத்தைப்
பிரதி எடுத்து
அதையும்
எட்டாத உயரத்தில்
வைத்துவிட்டுப்
போய்விட்டாய்
உன் திருமணத்திற்கு
உன் வார்த்தைகளை
அனுப்பி வைத்திருந்தேன்
பத்திரமாய் திரும்பி வந்து
இன்னமும்
கதை கதையாய்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன்னைப் பிரிந்தாலும்
உன் வார்த்தைகளைப் பிரிய மனமில்லை
எனக்கு வாய்க்கரிசி போடப்போகிறவர்களிடம்
அவற்றைக் குடுத்து
சேர்த்துப் போடச் சொல்ல வேண்டும்
என்று நீ கூறிய இடத்தில்
என் ஆசைகள்
இன்று
ஆயிரம் விழுதுகள் விட்டு
வளர்ந்து நிற்கின்றன
நான்
அந்த வார்த்தைகளுடந்தான்
வாழ்ந்து வருகிறேன்
உன்னோடு
எல்லாமும் போய்விட்டன...
இந்த உயிர் மட்டும்
அந்த வார்த்தைகளுக்கிடையில்
எங்கோ
ஒளிந்து கொண்டுவிட்டது
ஒரு முறை
நான் தொட்ட
உன் கன்னத்தைப்
பிரதி எடுத்து
அதையும்
எட்டாத உயரத்தில்
வைத்துவிட்டுப்
போய்விட்டாய்
உன் திருமணத்திற்கு
உன் வார்த்தைகளை
அனுப்பி வைத்திருந்தேன்
பத்திரமாய் திரும்பி வந்து
இன்னமும்
கதை கதையாய்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன்னைப் பிரிந்தாலும்
உன் வார்த்தைகளைப் பிரிய மனமில்லை
எனக்கு வாய்க்கரிசி போடப்போகிறவர்களிடம்
அவற்றைக் குடுத்து
சேர்த்துப் போடச் சொல்ல வேண்டும்
Friday, October 10, 2014
அன்புள்ள அக்காவிற்கு,
அன்புள்ள அக்காவிற்கு,
வாழ்க்கை சில பாடங்களை நமக்குத் திரும்ப திரும்பக் கற்றுக்கொடுக்கிறது, அல்லது நாம் திரும்ப திரும்பப் படிக்கிறோம்.கிளையிலிருந்து உதிர்ந்த இலை கடலில் விழுந்தால் என்ன? கரையில் விழுந்தால் என்ன? சிலவற்றைப் பேசாமல் இருந்திருக்கலாம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.
மரணம் எல்லாவற்றையும் நேர் படுத்திவிடுகிறது, சமன் படுத்திவிடுகிறது என்று எங்கோ படித்ததாய் நியாபகம். என்னளவில் தீராத அன்பும் அவ்வாறே. உடனடி எதிர்வினைகள் அடங்கிய பின் அமைதியான, ஆழமான ஒரு கடலைக் கொண்டிருக்கும் அது.
தோள் சாய்ந்து நீ அழும்போது, வழிந்தோடும் உன் கண்ணீரின் கனம் தாங்காமல்தான் புலம்புகின்றேன். உன் தோட்டத்தில் பூக்கும் பூக்களுக்கு தனி வாசம் உண்டு, அதை மனிதர்களின் சந்தையில் விற்காதே என்றுதான் கூறுகின்றேன்.
அழும் குழந்தையால் வார்தைகளை செரிக்கவே முடிவதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அரவணைப்புகளில் ஒளிந்திருக்கிறது சமாதானம் செய்யும் மந்திரம். ஆம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.
சில பிரிவுகள், எதுவுமே எழுதப்படக்கூடாத/தேவைப்படாத ஒரு வெற்றிடத்தை விட்டுத்தான் செல்கின்றன என்பது புரிகிறது. ஏன் எப்பொழுதுமே அழுதுகொண்டிருக்கிறாய் என்று சிலரிடம் கேட்பது ஏன் உனக்கு வண்ணங்களே தெரிவதில்லை என்று குருடனிடம் கேட்பதைப் போன்று அபத்தமானது. என்றாலும் எல்லா தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் ஏதோ ஒரு கணத்தில் நடந்துதான் விடுகின்றன.
மனுஷ்யபுத்திரனிடம் இந்தக் கவிதையை சத்தியமாக நான் எழுதச்சொல்லவில்லை. அவரும் எழுதாமல் விட்டிருக்கப்படவேண்டிய, அதிலும் குறிப்பாக இன்று எழுதிருக்கவே கூடாத ஒன்றை எழுதியிருக்கிறார்.
உன்னைவிட்டுப் போகும்போது
……………………………………………………….
�
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத
ஒரு விடுதலையை அளிக்கிறாய்
பதட்டமடையாமல்
அவருக்கு நீ விடைகொடு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய நிழல் இல்லாமல்
அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
அனுமதிக்கிறாய்
எந்தக் குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு
ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய பழக்கங்கள் மாறுவதுபோலவே
அவரது பழக்கங்களும் மாறிவிடுகின்றன
போகும்போது அவருக்கு நீ
எதையும் மறுக்காதே
ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
ஒரு சுவருக்கு அந்தப் பக்கமாய்
போவதாகவே அவர் உணர்கிறார்
நீ அவருக்கு
நல்வாழ்த்துகளைத் தெரிவி
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
எதையோ
கொஞ்சம் இழக்கிறாய்
அவரும் எதையோ
கொஞ்சம் இழந்துதான் போகிறார்
என்பதால் நீ துக்கமடைய வேண்டியதில்லை
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ இனி அவருக்குத் தர ஒன்றுமே
இல்லை என்பதால்தான் போகிறார்
நீ அவருக்கு
உன்னிடம் இருப்பதிலேயே
சிறந்த ஒன்றை அப்போது
பரிசளித்துவிடு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
இனி எப்போதும் திரும்பவே மாட்டார்
என்றுதான் நினைக்கிறாய்
அந்தக் கணத்தின் அன்பை
அந்தக் கணத்தின் வெறுப்பை
அவருக்கு முழுமையாகக் காட்டு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
அவர் வெளிச்சத்தை நோக்கிப் போவதாக
ஒரு கணம் உணர்கிறார்
நீ அப்போது
ஒரு காதல் கவிதையை
எழுதாமலிரு
நாளை என்பது நிச்சயம் மற்றுமொரு நாளே. நம்பிக்கைகளே அதன் நிறம் மாற்றித் தர வல்லவை. நாளை உன் கண்ணீரின் கனமேனும் குறையும் என்ற நம்பிக்கையில் எழுதப்படாமல் விட்டிருக்கப்படவேண்டிய இக்கடிதம் முடிவடைகிறது.
வாழ்க்கை சில பாடங்களை நமக்குத் திரும்ப திரும்பக் கற்றுக்கொடுக்கிறது, அல்லது நாம் திரும்ப திரும்பப் படிக்கிறோம்.கிளையிலிருந்து உதிர்ந்த இலை கடலில் விழுந்தால் என்ன? கரையில் விழுந்தால் என்ன? சிலவற்றைப் பேசாமல் இருந்திருக்கலாம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.
மரணம் எல்லாவற்றையும் நேர் படுத்திவிடுகிறது, சமன் படுத்திவிடுகிறது என்று எங்கோ படித்ததாய் நியாபகம். என்னளவில் தீராத அன்பும் அவ்வாறே. உடனடி எதிர்வினைகள் அடங்கிய பின் அமைதியான, ஆழமான ஒரு கடலைக் கொண்டிருக்கும் அது.
தோள் சாய்ந்து நீ அழும்போது, வழிந்தோடும் உன் கண்ணீரின் கனம் தாங்காமல்தான் புலம்புகின்றேன். உன் தோட்டத்தில் பூக்கும் பூக்களுக்கு தனி வாசம் உண்டு, அதை மனிதர்களின் சந்தையில் விற்காதே என்றுதான் கூறுகின்றேன்.
அழும் குழந்தையால் வார்தைகளை செரிக்கவே முடிவதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அரவணைப்புகளில் ஒளிந்திருக்கிறது சமாதானம் செய்யும் மந்திரம். ஆம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.
சில பிரிவுகள், எதுவுமே எழுதப்படக்கூடாத/தேவைப்படாத ஒரு வெற்றிடத்தை விட்டுத்தான் செல்கின்றன என்பது புரிகிறது. ஏன் எப்பொழுதுமே அழுதுகொண்டிருக்கிறாய் என்று சிலரிடம் கேட்பது ஏன் உனக்கு வண்ணங்களே தெரிவதில்லை என்று குருடனிடம் கேட்பதைப் போன்று அபத்தமானது. என்றாலும் எல்லா தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் ஏதோ ஒரு கணத்தில் நடந்துதான் விடுகின்றன.
மனுஷ்யபுத்திரனிடம் இந்தக் கவிதையை சத்தியமாக நான் எழுதச்சொல்லவில்லை. அவரும் எழுதாமல் விட்டிருக்கப்படவேண்டிய, அதிலும் குறிப்பாக இன்று எழுதிருக்கவே கூடாத ஒன்றை எழுதியிருக்கிறார்.
உன்னைவிட்டுப் போகும்போது
……………………………………………………….
�
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத
ஒரு விடுதலையை அளிக்கிறாய்
பதட்டமடையாமல்
அவருக்கு நீ விடைகொடு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய நிழல் இல்லாமல்
அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
அனுமதிக்கிறாய்
எந்தக் குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு
ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
உன்னுடைய பழக்கங்கள் மாறுவதுபோலவே
அவரது பழக்கங்களும் மாறிவிடுகின்றன
போகும்போது அவருக்கு நீ
எதையும் மறுக்காதே
ஒருவர்
உன்னைவிட்டுப் போகும்போது
ஒரு சுவருக்கு அந்தப் பக்கமாய்
போவதாகவே அவர் உணர்கிறார்
நீ அவருக்கு
நல்வாழ்த்துகளைத் தெரிவி
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
எதையோ
கொஞ்சம் இழக்கிறாய்
அவரும் எதையோ
கொஞ்சம் இழந்துதான் போகிறார்
என்பதால் நீ துக்கமடைய வேண்டியதில்லை
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
நீ இனி அவருக்குத் தர ஒன்றுமே
இல்லை என்பதால்தான் போகிறார்
நீ அவருக்கு
உன்னிடம் இருப்பதிலேயே
சிறந்த ஒன்றை அப்போது
பரிசளித்துவிடு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
இனி எப்போதும் திரும்பவே மாட்டார்
என்றுதான் நினைக்கிறாய்
அந்தக் கணத்தின் அன்பை
அந்தக் கணத்தின் வெறுப்பை
அவருக்கு முழுமையாகக் காட்டு
ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
அவர் வெளிச்சத்தை நோக்கிப் போவதாக
ஒரு கணம் உணர்கிறார்
நீ அப்போது
ஒரு காதல் கவிதையை
எழுதாமலிரு
நாளை என்பது நிச்சயம் மற்றுமொரு நாளே. நம்பிக்கைகளே அதன் நிறம் மாற்றித் தர வல்லவை. நாளை உன் கண்ணீரின் கனமேனும் குறையும் என்ற நம்பிக்கையில் எழுதப்படாமல் விட்டிருக்கப்படவேண்டிய இக்கடிதம் முடிவடைகிறது.
விடியல்
எல்லாம் முடிந்துவிட்டது
அல்லது
எதுவுமே நடக்கவில்லை
என்ற பாவனையுடந்தான்
ஒவ்வொரு நாளும்
விடிகிறது
***
இந்தப் பகலில் ஏறி
அக்கரையில் இருக்கும்
என் தம்பியைப்
பார்க்கச் செல்லவேண்டும்
இரவில்
திரும்பிவிடலாம்
***
துகிலுறிக்கிறார்கள்
இல்லை
துணியைச் சுற்றிவிடுகிறார்கள்
ஆண்கள்
எப்பொழுதும்
பெண்களுக்காய்
அடுப்பங்கரையிலே
ஒரு உலகைச் சமைக்கிறார்கள்
***
ஒளியாலும்
இருளாலும்
மூடப்பட்டிருக்கும்
உலகின் ஆழத்தில்
ஓடுவது
ஒன்றே
அல்லது
எதுவுமே நடக்கவில்லை
என்ற பாவனையுடந்தான்
ஒவ்வொரு நாளும்
விடிகிறது
***
இந்தப் பகலில் ஏறி
அக்கரையில் இருக்கும்
என் தம்பியைப்
பார்க்கச் செல்லவேண்டும்
இரவில்
திரும்பிவிடலாம்
***
துகிலுறிக்கிறார்கள்
இல்லை
துணியைச் சுற்றிவிடுகிறார்கள்
ஆண்கள்
எப்பொழுதும்
பெண்களுக்காய்
அடுப்பங்கரையிலே
ஒரு உலகைச் சமைக்கிறார்கள்
***
ஒளியாலும்
இருளாலும்
மூடப்பட்டிருக்கும்
உலகின் ஆழத்தில்
ஓடுவது
ஒன்றே
Thursday, October 9, 2014
மழைக் குறிப்புகள்…
என்
வாழ்க்கைப் புத்தகத்தின்
கருப்பு பக்கங்களை
ஒவ்வொரு முறையும்
அழித்துத் தருகிறது
இந்த
மழை
*
உதிரும்போது
மலரும் பூ
மழை
*
இடியுடன் கூடய மழை
காதலர்களுக்கென
ப்ரத்யேகமானது
*
தொட்டாச் சிணுங்கிகள்
பாவமென
குடைக்கு வெளியே
பெய்கிறது
மழை
*
இக்காலைப் பொழுதில்
அடுத்த மழையில்
சந்திப்போமென
பிரிந்து செல்கின்றன
பறவைகள்
*
நானில்லா நேரத்தில்
வந்து போன
மழையை
ரகசியமாய்
படம் பிடித்து வைத்திருக்கும்
என் அறையின்
மின் விசிறியை
ஓடவிட்டு
கனவில்
நனையப் போகிறேன்
மழை
பெய்யட்டும்…!
வாழ்க்கைப் புத்தகத்தின்
கருப்பு பக்கங்களை
ஒவ்வொரு முறையும்
அழித்துத் தருகிறது
இந்த
மழை
*
உதிரும்போது
மலரும் பூ
மழை
*
இடியுடன் கூடய மழை
காதலர்களுக்கென
ப்ரத்யேகமானது
*
தொட்டாச் சிணுங்கிகள்
பாவமென
குடைக்கு வெளியே
பெய்கிறது
மழை
*
இக்காலைப் பொழுதில்
அடுத்த மழையில்
சந்திப்போமென
பிரிந்து செல்கின்றன
பறவைகள்
*
நானில்லா நேரத்தில்
வந்து போன
மழையை
ரகசியமாய்
படம் பிடித்து வைத்திருக்கும்
என் அறையின்
மின் விசிறியை
ஓடவிட்டு
கனவில்
நனையப் போகிறேன்
மழை
பெய்யட்டும்…!
ஏனோ…
வெள்ளிக்கிழமைகளில்
ஒலியும் ஒளியும் காண
காத்திருந்த நாட்களை
நாட்குறிப்புகளில்
தேடிக்கொண்டிருக்கும்பொழுது
கையில் சிக்கின,
எனக்காய் காத்திருந்து
வந்தவுடன் மேலே விழுந்து விளையாடும்
மது என்னும் என் நாய்க்குட்டியுடனான நாட்கள்.
வேறெதுவும் கிடைத்துவிடக் கூடாதென
அவசரமாய் மூடி வைக்கிறேன்,ஏனோ
சில கருப்பு பக்கங்களுக்கு
இன்னமும்
காவல் நிற்கிறது
மது
**
சொர்கமோ நரகமோ
போய் விடலாமென்று
நடந்து சென்று கொண்டிருந்தேன்
பின்னால் வந்து மோதியது
ஒரு மிதி வண்டி
முன்பொரு நாள்
என் பிருட்டத்தில் வந்து
முட்டிய ஆட்டுக்குட்டியின்
நினைவு ஏனோ வர
சிரித்துக் கொண்டேன்
சிரிக்கத் தொடங்கிய
நொடியிலிருந்து
வெகு தொலைவில்
சொர்கமும்
நரகமும்…
**
அந்தப் படத்தைப்
பார்த்து
அந்த இருவரும்
காதலிக்கத் தொடங்கினர்
அந்தப் படத்தில்
வருபவர்களைப்போலவே
காதலித்தனர்
ஊடலும் கூடலும்
அப்படியே
அப்படத்தில்
திருமணம் நடந்த
அதே இடத்தில்
இவர்கள் திருமணமும்
அப்படம்
அத்துடன் முடிவடைந்தது
இப்பொழுது
இவர்களின்
முடிவில்
தொடங்க இருக்கிறது
அடுத்தப் படமொன்று
ஒலியும் ஒளியும் காண
காத்திருந்த நாட்களை
நாட்குறிப்புகளில்
தேடிக்கொண்டிருக்கும்பொழுது
கையில் சிக்கின,
எனக்காய் காத்திருந்து
வந்தவுடன் மேலே விழுந்து விளையாடும்
மது என்னும் என் நாய்க்குட்டியுடனான நாட்கள்.
வேறெதுவும் கிடைத்துவிடக் கூடாதென
அவசரமாய் மூடி வைக்கிறேன்,ஏனோ
சில கருப்பு பக்கங்களுக்கு
இன்னமும்
காவல் நிற்கிறது
மது
**
சொர்கமோ நரகமோ
போய் விடலாமென்று
நடந்து சென்று கொண்டிருந்தேன்
பின்னால் வந்து மோதியது
ஒரு மிதி வண்டி
முன்பொரு நாள்
என் பிருட்டத்தில் வந்து
முட்டிய ஆட்டுக்குட்டியின்
நினைவு ஏனோ வர
சிரித்துக் கொண்டேன்
சிரிக்கத் தொடங்கிய
நொடியிலிருந்து
வெகு தொலைவில்
சொர்கமும்
நரகமும்…
**
அந்தப் படத்தைப்
பார்த்து
அந்த இருவரும்
காதலிக்கத் தொடங்கினர்
அந்தப் படத்தில்
வருபவர்களைப்போலவே
காதலித்தனர்
ஊடலும் கூடலும்
அப்படியே
அப்படத்தில்
திருமணம் நடந்த
அதே இடத்தில்
இவர்கள் திருமணமும்
அப்படம்
அத்துடன் முடிவடைந்தது
இப்பொழுது
இவர்களின்
முடிவில்
தொடங்க இருக்கிறது
அடுத்தப் படமொன்று
Sunday, October 5, 2014
பாட்டி
"பாட்டி.. பாட்டி நான் சொல்லிண்டே இருக்கேன். கேட்காம எங்க கிளம்பிட்ட." பாட்டி காய் கறி வாங்க போவதாய் சொல்லிக்கொண்டிருந்தாள். பையுடன் வாசலை நோக்கி தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கினாள்."குடு பாட்டி நான் வேணாபோய்ட்டு வரேன்." பையை வாங்கப் போன என் கையைத் தட்டி விட்டாள். பின் என் கையையே பிடித்துக்கொண்டு செருப்பைப் போட்டுக்கொண்டாள். "தாத்தா, பாரு தாத்தா நான் சொல்ல சொல்ல கேட்க்காம கடைக்கு போறா பாட்டி.” ஹாலில் உட்கார்ந்து தினமலர் படித்துக்கொண்டிருந்த தாத்தாவும் எதுவும் பதில் சொல்லவில்லை. பாட்டி அதற்குள் வெளி கேட்டைத் திறந்து சென்றுகொண்டிருந்தாள். நான் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வந்த அம்மா ஒரு நிமிடம் வெளியே போகும் பாட்டியையும், என்னையும், தாத்தாவையும் பார்த்து விட்டு மீண்டும் அடுப்படிக்குள்ளேயே சென்று விட்டாள். எல்லோரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நான் தான் அதிகமாக கவலைப் படுகிறேனோ என்று தோன்றியது. பாட்டிக்கு எழுபது வயது முடியப் போகிறது. நோய் நொடி எதுவுமில்லை என்றாலும் இடுப்பு எலும்பு தேய்ந்து போனதால் நடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தாள். இத்தனைக் காலம் வீட்டை விட்டு வெளியே அதிகம் சென்றதில்லை. எல்லாமே தாத்தாதான். ஆனால் சமீபகாலமாய் அவளிடம் மாற்றங்கள். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தாத்தா முன் நின்று அதிகம் அவள் பேசியதே இல்லை. கேட்டதுக்கு மட்டுமே பதில் சொல்வாள். அதிலும் சிரித்துப் பேசி ஒரு நாள் கூட பார்த்ததில்லை. இப்பொழுதெல்லாம் அவளே வலிய போய் பேசுகிறாள். டீவியில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கிறாள். யார் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் சத்தம் போட்டுச் சிரிக்கிறாள். அவள் மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. எனக்கு அவள் தனியே வெளியே செல்லத் தொடங்கிய பின்புதான் கவலை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் பாதை அரைக்கிலோ மீட்டர் இருக்கும். பழக்கடைக்கு வந்தவள் பாதி வழியில் தலைச் சுற்றல் ஏற்பட்டு ஒரு வீட்டு வாசலில் அப்படியே உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துவிட்டு "ஒன்னுமில்லடா. லேசா தலய சுத்திடுத்து. வா போலாம்" என்று சமாளித்துவிட்டாள். எனக்கு அன்றிலிருந்து அவளைத் தனியே வெளியே அனுப்ப பயம்.
நீண்ட நேரமாகியும் பாட்டியைக் காணாததால் எனக்கு பதட்டம் அதிகரித்தது. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். "வருவாடா. இங்க இருக்க கடைக்குதான போயிருக்கா" அம்மா.
" அதான்மா பயமாருக்கு. இங்க இருக்க கடைக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா?"
" நீ வேணா போய் பாத்துட்டுதான் வாயேன். இங்கேயே உக்காந்துண்டு ஏன் இப்படி புலம்பிண்ட்ருக்க"
அதுவும் சரிதான். சட்டையை போட்டுக்கொண்டு வாசலிற்கு போவதற்குள் பாட்டி வெளி கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள்.வலது கை முழுவதும் ஒரே மண். முட்டிக்காலிலும் மண் ஒட்டியிருந்தது.
"என்ன பாட்டி விழுந்துட்டியா"
"ஒன்னுமில்லடா கண்ணா. கல்லு தட்டி விட்றுத்து. பெருசா அடிலாம் இல்லே. மழ பெஞ்ச ஈர மண்றதனால மேலெல்லாம் மண்ணாயிடுத்து. மத்தபடி எதுவுமில்லே"
"இதுக்குத்தான் சொன்னேன். தனியா வெளிய போகதா போகாதன்னு. ஏன் பாட்டி இப்படி பன்ற" கோபம் தலைக்கு ஏற கத்தத் தொடங்கினேன்.அதற்குள்ளாக அம்ம வந்து பாட்டியிடம் காய்கறிப் பையை வாங்கி வைத்து, மண்ணையெலலாம் துடைத்துவிட்டு வேறு புடவை மாற்றி ஹாலில் இருக்கும் சேரில் உட்கார வைத்தாள்."ஒன்னுமில்லடா. நீ பயப்படாத" என்று பாட்டி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மா பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை. பாட்டியை ஹாலில் விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள். தாத்தாவோ அந்த தினமலர் பேப்பரிலிருந்து தலையை வெளியே எடுக்கவேயில்லை.
"நான் இங்க ஒருத்தன் கத்திண்டிருக்கேன். உங்க யார் காதுலயும் விழலையா. பாட்டி கீழ விழுந்து எழுந்து வந்துருக்கா. யாருமே கண்டுக்காம உங்க வேலய பாத்துண்ட்ருக்கேள்"
"டேய். சும்மா கத்திண்டே கிடக்காத. உன் பிரண்ட பாக்கனும்ன்னு சொன்னல்ல. போய் பாரு போ" உள்ளிருந்து அம்மாவின் குரல். எனக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஏன் யாருமே கொஞ்சம் கூட அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தாத்தா ஏன் இப்படி இருக்கிறார். தன் வாழ்க்கை முழுவதும் அவரே கதியெனக் கிடந்த ஜீவனைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது. எனக்கு தாத்தாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சுய நலத்தின் மொத்த உருவமாகத் தெரிந்தார்.
"பாட்டி, கைகால் எதுவும் வலிக்கிறதா? நான் மாத்திர வாங்கிண்டு வரவா"
"அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான் நன்னா இருக்கேன். நீ போய்ட்டு வா" என்று சொல்லி விட்டு டீவியைப் பார்க்கத் தொடங்கினாள். எனக்குத்தான் மனம் கேட்கவே இல்லை. யோசித்துக்கொண்டே வெளியே கிளம்பி வந்தேன்.
வழி நெடுகும் மனதில் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. பாட்டி என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். பாட்டிக்கும் என் மீது அதிக பாசம் உண்டு. தாத்தாவும், பாட்டியும் கடந்த ஒரு வருடமாகத்தான் எங்களுடன் தங்கி இருக்கிறார்கள். அதற்கு முன் மாமவுடன் மதுரையில் இருந்தார்கள். சின்ன வயதில் மாமா வீட்டில் தங்கி ஒரு வருடம் படித்தேன். அப்பொழுதிருந்துதான் எனக்குப் பாட்டியைப் பிடிக்கத் தொடங்கியது. பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
அன்றைக்குப் பிறகு பாட்டி இரண்டு முறை விழுந்து எழுந்துவிட்டாள். இரண்டாவது முறை நல்ல அடி. இன்னும் கொஞ்சம் பலமாக அடி பட்டிருந்தாலும் போய் சேர்ந்திருப்பாள். வீட்டிலிருப்பவர்கள் அப்பொழுதுதான் கவலைப் படுவதாகத் தெரிந்தது. தாத்தா அவள் வெளியே போகும்போதெல்லாம் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளத் தொடங்கினார். திரும்பி வரும் வரை அவர் மிகவும் கவலையோடு இருப்பார். பாட்டி இரண்டாவது முறை அடி பட்டு வந்ததும் எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. நான் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டி வெளியே போவதைத் தடுத்தார்கள். அதையும் மீறி சில நாட்கள் அவள் வெளியே செல்வதுண்டு.
"தாத்தா.." பாட்டியின் வருகைக்காக வாசற் திண்ணையில் போய் உட்கார்ந்திருந்தவரின் முன்னால் போய் நின்றேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர், "சொல்லுடா" என்றார்.
"தாத்தா. நானும் பாத்துண்டேதான் இருக்கேன். இங்க நடக்கற எதுவும் சரியா படல."
"பாட்டியப் பத்திப் பேசறயா?"
"ஆமா.வேற எதப் பத்திப் பேசப் போறேன்" தாத்தா சிரித்தார். எனக்கு அது மேலும் எரிச்சலூட்டியது. "இதத்தான் என்னால தாங்கிக்க முடியல. உனக்கு பாட்டி மேல கொஞ்சம் கூட பாசம் கிடையாதா. அவ ஒவ்வொருதடவயும் வெளில போய்ட்டு வரதுக்குள்ள நான் என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயந்துண்ட்ருக்கேன். நீ என்னடான்னா சிரிக்கற"
தாத்தா என்னை ஒரு நொடி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். சட்டையை மாட்டிகொண்டு வந்து, "வா போலாம்" என்றார்.
"எங்க?"
"பாட்டி கோவிலுக்குப் போயிருக்கா. வா போய் பாத்துக் கூட்டிண்டு வரலாம்" சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். எனக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இருவரும் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் முழுவதையும் சுத்தி வந்தும் பாட்டியைக் காணவில்லை. கோவிலின் பின்னால் ஒரு பூங்கா இருந்தது. ஒரு வேளை அங்கு போயிருப்பாளோ என்ற சந்தேகத்தில் போய்ப் பார்த்தோம். பாட்டி அங்குதான் இருந்தாள். மர நிழலிலிருந்த பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.
"வா தாத்தா போய் கூட்டிண்டு வரலாம். அங்க என்ன செய்றா தனியா உக்காந்துண்டு?"
"இருடா. அவசரப்படாத. கொஞ்ச நேரம் அமைதியா அவ என்ன பன்றான்னு பாரு"
ஒன்றும் புரியாதவனாய் அமைதியானேன்.
பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேறெதுவுமே செய்யவில்லை. அரை மணி நேரம் அங்கு போகிற வருபவர்களை பார்த்து கொண்டு இருந்ததோடு சரி. பின் எழுந்து ஆத்திற்கு கிளம்பி நடக்கத் தொடங்கினாள்.
தாத்தாவைப் பார்த்தேன்.
"கண்ணா.. உங்க பாட்டி ஏன் இப்படி வெளில வெளில் போறதுல இவ்வளவு அடமா இருக்கான்னு தான கேட்டுண்டே இருக்க. எனக்கு தெரிலடா. அவ இப்படிலாம் இருந்ததில்லதான். போன வருசம் அவளுக்கு ஒரு தடவ ஸ்ட்ரோக் வந்தது. மைல்டான ஸ்ட்ரோக்தான்.."
"என்ன தாத்தா சொல்ற"
"ஆமாட உனக்கு இதெல்லாம் தெரிய வேணாம்ன்னு நினச்சோம். அப்ப உனக்கு எக்ஸாம் டைம். ஒன்னு பயப்பட வேணாம்ன்னு டாக்டர் சொன்னார். ஆனா இன்னொரு தடவ வந்தா ரிஸ்க்ன்னு சொல்லிட்டார். முடிஞ்ச வர அவளுக்கு அதிகம் டென்சன் குடுக்காம பாத்துக்கோங்கோன்னு சொன்னார். அதுல இருந்து உங்க மாமவும், மாமியும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. பேசாம டீவி மட்டும் பாத்துண்டு இருங்கோன்னு சொல்லிட்டா. கொஞ்ச நாள் ஆக ஆக உன் பாட்டிகிட்ட சேஞ்சஸ். என்னய வெளில கூட்டிண்டு போங்கோ, நான் எவ்வளவு நாழி சும்மாவே உக்காந்துண்டு இருக்கறதுன்னு புலம்ப ஆரம்பிச்சா. கோவிலுக்கு கூட்டிண்டு போனோம். அப்பறம் ஒரு நாள் தனியாவே கிளம்புனா. இருடி நானும் வரேன்னு சொன்னதுக்கு வேண்டாம் வராதீங்கோ நான் மட்டும் போய்க்கிறேன்னு சொன்னா. என்னடி இது புதுசா தனியா போறேன்னு சொல்லிண்ட்ருக்கன்னு கேட்டதுக்கு பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டா. அன்னைல இருந்து இப்படித்தான். எங்க போனாலும் தனியாவே போகனும்னு விரும்புறா. இங்க வந்தாலாச்சும் ஏதாவது மாற்றம் வரதான்னு பாக்கலாம்ன்னுதான் இங்க கூட்டிண்டு வந்தேன். நன்னாதான் இருந்தா. கொஞ்ச நாள் முன்னாடி மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போய்ட்டு வந்தோமோல்யோ அதுக்கப்பறம் உங்கம்மாவும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. மறுபடியும் இப்படி ஆயிட்டா. இந்த தடவ ரொம்ப சீரியஸா ரியாக்ட் பன்ன ஆரம்பிச்சுட்டா. டாக்டர்ஸ் அவள அவ போக்குல விடறதுதான் நல்லதுன்னு சொல்லிட்டா.
"தாத்தா எதவாது ஆயிடுத்துன்னா என்ன பன்றது. கத்துனாலும் பரவால்லன்னு உள்ளயே இருக்க வைக்க வேண்டியதுதான. லாஸ்ட் டைம் நான் கோபமா பேசுனதுக்கப்பறம் இப்போ குறச்சுருக்காளே"
"கண்ணா. போகாம இருக்காதான். ஆனா போகனும்ன்னு தோண்றது போலயே அவளுக்கு. இல்லன்னா ஏன் இப்படி வந்து அரை மணி நேரம் உக்கார போறா. இது இன்னைக்கு நேத்து வந்த எண்ணமா இருக்காதுடா கண்ணா. அவ வாழ்க்கை பூரா அவ அடி மனசுல இருந்துருக்கும். அடுப்படியத் தவிர வாசலுக்குத்தான் அதிகப் பட்சம் போயிருக்கா. அத தாண்டுனதில்ல. எல்லாம் இப்ப வெளில வரது."
நான் மனம் சாந்தி அடையாதவனாக இருந்தேன்.
"எனக்கு உன் பயம் புரியறது. வாழ்க்கைல எல்லாத்துக்கும் மரணம் ஒரு நாள் நிச்சயமா வரத்தாண்டா போறது. வீட்டுக்குள்ளயே இருந்துட்டா சாகாமயே இருக்கப் போறமா என்ன. இத்தன நாள் அவள வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சுட்டோம்ன்னு தோன்றதுடா. வெளி உலகத்த அவ பாக்கவே இல்ல. நாலு மனுசா முகம் பாக்கட்டும். கொஞ்சம் காத்தாட நடந்தாவே மனசு லேசாகும். அதான் அவள போக விடறது. ஆப்டர் ஆல் திஸ் லைப் ஹேஸ் நோ மீனிங் அட் தி எண்ட்." சொல்லிவிட்டு தாத்தா நோக்கி தொடங்கினார்.
எனக்கு தாத்தாவின் வேதாந்தங்கள் ஒன்றும் புரியவில்லை. எழுபது வயது பாட்டியைத் தனியாக விடுவதில் என்ன தத்துவம் இருக்கிறது. வயதானவர்களையும், குழந்தைகளையும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.இருந்தாலும் “பாட்டி வெளி உலகம் பார்க்க விரும்புகிறா. ஏற்கனவே ஒரு முறை நான் சொன்னதைக் கேட்டுள்ளா. இனி நான் வந்து உன்ன வெளில கூட்டிண்டு போறேன். நீயா தனியா போகதன்னு சொன்னா கேட்பா” என்று நினைத்துக்கொண்டே தாத்தாவைப் பின் தொடர்ந்தேன்.
நீண்ட நேரமாகியும் பாட்டியைக் காணாததால் எனக்கு பதட்டம் அதிகரித்தது. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். "வருவாடா. இங்க இருக்க கடைக்குதான போயிருக்கா" அம்மா.
" அதான்மா பயமாருக்கு. இங்க இருக்க கடைக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா?"
" நீ வேணா போய் பாத்துட்டுதான் வாயேன். இங்கேயே உக்காந்துண்டு ஏன் இப்படி புலம்பிண்ட்ருக்க"
அதுவும் சரிதான். சட்டையை போட்டுக்கொண்டு வாசலிற்கு போவதற்குள் பாட்டி வெளி கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள்.வலது கை முழுவதும் ஒரே மண். முட்டிக்காலிலும் மண் ஒட்டியிருந்தது.
"என்ன பாட்டி விழுந்துட்டியா"
"ஒன்னுமில்லடா கண்ணா. கல்லு தட்டி விட்றுத்து. பெருசா அடிலாம் இல்லே. மழ பெஞ்ச ஈர மண்றதனால மேலெல்லாம் மண்ணாயிடுத்து. மத்தபடி எதுவுமில்லே"
"இதுக்குத்தான் சொன்னேன். தனியா வெளிய போகதா போகாதன்னு. ஏன் பாட்டி இப்படி பன்ற" கோபம் தலைக்கு ஏற கத்தத் தொடங்கினேன்.அதற்குள்ளாக அம்ம வந்து பாட்டியிடம் காய்கறிப் பையை வாங்கி வைத்து, மண்ணையெலலாம் துடைத்துவிட்டு வேறு புடவை மாற்றி ஹாலில் இருக்கும் சேரில் உட்கார வைத்தாள்."ஒன்னுமில்லடா. நீ பயப்படாத" என்று பாட்டி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மா பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை. பாட்டியை ஹாலில் விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள். தாத்தாவோ அந்த தினமலர் பேப்பரிலிருந்து தலையை வெளியே எடுக்கவேயில்லை.
"நான் இங்க ஒருத்தன் கத்திண்டிருக்கேன். உங்க யார் காதுலயும் விழலையா. பாட்டி கீழ விழுந்து எழுந்து வந்துருக்கா. யாருமே கண்டுக்காம உங்க வேலய பாத்துண்ட்ருக்கேள்"
"டேய். சும்மா கத்திண்டே கிடக்காத. உன் பிரண்ட பாக்கனும்ன்னு சொன்னல்ல. போய் பாரு போ" உள்ளிருந்து அம்மாவின் குரல். எனக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஏன் யாருமே கொஞ்சம் கூட அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தாத்தா ஏன் இப்படி இருக்கிறார். தன் வாழ்க்கை முழுவதும் அவரே கதியெனக் கிடந்த ஜீவனைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது. எனக்கு தாத்தாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சுய நலத்தின் மொத்த உருவமாகத் தெரிந்தார்.
"பாட்டி, கைகால் எதுவும் வலிக்கிறதா? நான் மாத்திர வாங்கிண்டு வரவா"
"அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான் நன்னா இருக்கேன். நீ போய்ட்டு வா" என்று சொல்லி விட்டு டீவியைப் பார்க்கத் தொடங்கினாள். எனக்குத்தான் மனம் கேட்கவே இல்லை. யோசித்துக்கொண்டே வெளியே கிளம்பி வந்தேன்.
வழி நெடுகும் மனதில் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. பாட்டி என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். பாட்டிக்கும் என் மீது அதிக பாசம் உண்டு. தாத்தாவும், பாட்டியும் கடந்த ஒரு வருடமாகத்தான் எங்களுடன் தங்கி இருக்கிறார்கள். அதற்கு முன் மாமவுடன் மதுரையில் இருந்தார்கள். சின்ன வயதில் மாமா வீட்டில் தங்கி ஒரு வருடம் படித்தேன். அப்பொழுதிருந்துதான் எனக்குப் பாட்டியைப் பிடிக்கத் தொடங்கியது. பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
அன்றைக்குப் பிறகு பாட்டி இரண்டு முறை விழுந்து எழுந்துவிட்டாள். இரண்டாவது முறை நல்ல அடி. இன்னும் கொஞ்சம் பலமாக அடி பட்டிருந்தாலும் போய் சேர்ந்திருப்பாள். வீட்டிலிருப்பவர்கள் அப்பொழுதுதான் கவலைப் படுவதாகத் தெரிந்தது. தாத்தா அவள் வெளியே போகும்போதெல்லாம் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளத் தொடங்கினார். திரும்பி வரும் வரை அவர் மிகவும் கவலையோடு இருப்பார். பாட்டி இரண்டாவது முறை அடி பட்டு வந்ததும் எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. நான் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டி வெளியே போவதைத் தடுத்தார்கள். அதையும் மீறி சில நாட்கள் அவள் வெளியே செல்வதுண்டு.
"தாத்தா.." பாட்டியின் வருகைக்காக வாசற் திண்ணையில் போய் உட்கார்ந்திருந்தவரின் முன்னால் போய் நின்றேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர், "சொல்லுடா" என்றார்.
"தாத்தா. நானும் பாத்துண்டேதான் இருக்கேன். இங்க நடக்கற எதுவும் சரியா படல."
"பாட்டியப் பத்திப் பேசறயா?"
"ஆமா.வேற எதப் பத்திப் பேசப் போறேன்" தாத்தா சிரித்தார். எனக்கு அது மேலும் எரிச்சலூட்டியது. "இதத்தான் என்னால தாங்கிக்க முடியல. உனக்கு பாட்டி மேல கொஞ்சம் கூட பாசம் கிடையாதா. அவ ஒவ்வொருதடவயும் வெளில போய்ட்டு வரதுக்குள்ள நான் என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயந்துண்ட்ருக்கேன். நீ என்னடான்னா சிரிக்கற"
தாத்தா என்னை ஒரு நொடி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். சட்டையை மாட்டிகொண்டு வந்து, "வா போலாம்" என்றார்.
"எங்க?"
"பாட்டி கோவிலுக்குப் போயிருக்கா. வா போய் பாத்துக் கூட்டிண்டு வரலாம்" சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். எனக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இருவரும் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் முழுவதையும் சுத்தி வந்தும் பாட்டியைக் காணவில்லை. கோவிலின் பின்னால் ஒரு பூங்கா இருந்தது. ஒரு வேளை அங்கு போயிருப்பாளோ என்ற சந்தேகத்தில் போய்ப் பார்த்தோம். பாட்டி அங்குதான் இருந்தாள். மர நிழலிலிருந்த பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.
"வா தாத்தா போய் கூட்டிண்டு வரலாம். அங்க என்ன செய்றா தனியா உக்காந்துண்டு?"
"இருடா. அவசரப்படாத. கொஞ்ச நேரம் அமைதியா அவ என்ன பன்றான்னு பாரு"
ஒன்றும் புரியாதவனாய் அமைதியானேன்.
பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேறெதுவுமே செய்யவில்லை. அரை மணி நேரம் அங்கு போகிற வருபவர்களை பார்த்து கொண்டு இருந்ததோடு சரி. பின் எழுந்து ஆத்திற்கு கிளம்பி நடக்கத் தொடங்கினாள்.
தாத்தாவைப் பார்த்தேன்.
"கண்ணா.. உங்க பாட்டி ஏன் இப்படி வெளில வெளில் போறதுல இவ்வளவு அடமா இருக்கான்னு தான கேட்டுண்டே இருக்க. எனக்கு தெரிலடா. அவ இப்படிலாம் இருந்ததில்லதான். போன வருசம் அவளுக்கு ஒரு தடவ ஸ்ட்ரோக் வந்தது. மைல்டான ஸ்ட்ரோக்தான்.."
"என்ன தாத்தா சொல்ற"
"ஆமாட உனக்கு இதெல்லாம் தெரிய வேணாம்ன்னு நினச்சோம். அப்ப உனக்கு எக்ஸாம் டைம். ஒன்னு பயப்பட வேணாம்ன்னு டாக்டர் சொன்னார். ஆனா இன்னொரு தடவ வந்தா ரிஸ்க்ன்னு சொல்லிட்டார். முடிஞ்ச வர அவளுக்கு அதிகம் டென்சன் குடுக்காம பாத்துக்கோங்கோன்னு சொன்னார். அதுல இருந்து உங்க மாமவும், மாமியும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. பேசாம டீவி மட்டும் பாத்துண்டு இருங்கோன்னு சொல்லிட்டா. கொஞ்ச நாள் ஆக ஆக உன் பாட்டிகிட்ட சேஞ்சஸ். என்னய வெளில கூட்டிண்டு போங்கோ, நான் எவ்வளவு நாழி சும்மாவே உக்காந்துண்டு இருக்கறதுன்னு புலம்ப ஆரம்பிச்சா. கோவிலுக்கு கூட்டிண்டு போனோம். அப்பறம் ஒரு நாள் தனியாவே கிளம்புனா. இருடி நானும் வரேன்னு சொன்னதுக்கு வேண்டாம் வராதீங்கோ நான் மட்டும் போய்க்கிறேன்னு சொன்னா. என்னடி இது புதுசா தனியா போறேன்னு சொல்லிண்ட்ருக்கன்னு கேட்டதுக்கு பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டா. அன்னைல இருந்து இப்படித்தான். எங்க போனாலும் தனியாவே போகனும்னு விரும்புறா. இங்க வந்தாலாச்சும் ஏதாவது மாற்றம் வரதான்னு பாக்கலாம்ன்னுதான் இங்க கூட்டிண்டு வந்தேன். நன்னாதான் இருந்தா. கொஞ்ச நாள் முன்னாடி மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போய்ட்டு வந்தோமோல்யோ அதுக்கப்பறம் உங்கம்மாவும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. மறுபடியும் இப்படி ஆயிட்டா. இந்த தடவ ரொம்ப சீரியஸா ரியாக்ட் பன்ன ஆரம்பிச்சுட்டா. டாக்டர்ஸ் அவள அவ போக்குல விடறதுதான் நல்லதுன்னு சொல்லிட்டா.
"தாத்தா எதவாது ஆயிடுத்துன்னா என்ன பன்றது. கத்துனாலும் பரவால்லன்னு உள்ளயே இருக்க வைக்க வேண்டியதுதான. லாஸ்ட் டைம் நான் கோபமா பேசுனதுக்கப்பறம் இப்போ குறச்சுருக்காளே"
"கண்ணா. போகாம இருக்காதான். ஆனா போகனும்ன்னு தோண்றது போலயே அவளுக்கு. இல்லன்னா ஏன் இப்படி வந்து அரை மணி நேரம் உக்கார போறா. இது இன்னைக்கு நேத்து வந்த எண்ணமா இருக்காதுடா கண்ணா. அவ வாழ்க்கை பூரா அவ அடி மனசுல இருந்துருக்கும். அடுப்படியத் தவிர வாசலுக்குத்தான் அதிகப் பட்சம் போயிருக்கா. அத தாண்டுனதில்ல. எல்லாம் இப்ப வெளில வரது."
நான் மனம் சாந்தி அடையாதவனாக இருந்தேன்.
"எனக்கு உன் பயம் புரியறது. வாழ்க்கைல எல்லாத்துக்கும் மரணம் ஒரு நாள் நிச்சயமா வரத்தாண்டா போறது. வீட்டுக்குள்ளயே இருந்துட்டா சாகாமயே இருக்கப் போறமா என்ன. இத்தன நாள் அவள வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சுட்டோம்ன்னு தோன்றதுடா. வெளி உலகத்த அவ பாக்கவே இல்ல. நாலு மனுசா முகம் பாக்கட்டும். கொஞ்சம் காத்தாட நடந்தாவே மனசு லேசாகும். அதான் அவள போக விடறது. ஆப்டர் ஆல் திஸ் லைப் ஹேஸ் நோ மீனிங் அட் தி எண்ட்." சொல்லிவிட்டு தாத்தா நோக்கி தொடங்கினார்.
எனக்கு தாத்தாவின் வேதாந்தங்கள் ஒன்றும் புரியவில்லை. எழுபது வயது பாட்டியைத் தனியாக விடுவதில் என்ன தத்துவம் இருக்கிறது. வயதானவர்களையும், குழந்தைகளையும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.இருந்தாலும் “பாட்டி வெளி உலகம் பார்க்க விரும்புகிறா. ஏற்கனவே ஒரு முறை நான் சொன்னதைக் கேட்டுள்ளா. இனி நான் வந்து உன்ன வெளில கூட்டிண்டு போறேன். நீயா தனியா போகதன்னு சொன்னா கேட்பா” என்று நினைத்துக்கொண்டே தாத்தாவைப் பின் தொடர்ந்தேன்.
வாடகை வீடு
மென்று துப்பப்பட்ட
முருங்கைக்காயாய் கிடக்கிறது
நாங்கள் குடியிருந்த
வாடகை வீடு...
முருங்கைக்காயாய் கிடக்கிறது
நாங்கள் குடியிருந்த
வாடகை வீடு...
சில நினைவுகள்
ஆணியடிக்கப்படாமல்
ஒரு பூனையைப் போல்
அங்கேயே
இன்னும்
சுத்திக்கொண்டிருக்கின்றன
தவற விட்டு வந்த
குளியலறை ரகசியங்களை
யாரிடமும்
சொல்லாமலிருக்க வேண்டும்
அந்த வீடு
பேரழகெல்லாம் இல்லை
எனினும்
திரும்பி ஒருமுறை
பார்க்காமல்
அவ்வீட்டைக்
கடந்து செல்ல
முடிந்ததேயில்லை
சில மாதங்களையோ
சில வருடங்களையோ
காசுக்கேற்றவாரு
பிடித்து நன்றாக
சமைத்துத் தருகின்றன
வாடகை வீடுகள்
வாடகை வீடுகளின்
பயணங்களில்
நாம் அவைகளின்
ரயில் சிநேகிதங்கள்
ஆணியடிக்கப்படாமல்
ஒரு பூனையைப் போல்
அங்கேயே
இன்னும்
சுத்திக்கொண்டிருக்கின்றன
தவற விட்டு வந்த
குளியலறை ரகசியங்களை
யாரிடமும்
சொல்லாமலிருக்க வேண்டும்
அந்த வீடு
பேரழகெல்லாம் இல்லை
எனினும்
திரும்பி ஒருமுறை
பார்க்காமல்
அவ்வீட்டைக்
கடந்து செல்ல
முடிந்ததேயில்லை
சில மாதங்களையோ
சில வருடங்களையோ
காசுக்கேற்றவாரு
பிடித்து நன்றாக
சமைத்துத் தருகின்றன
வாடகை வீடுகள்
வாடகை வீடுகளின்
பயணங்களில்
நாம் அவைகளின்
ரயில் சிநேகிதங்கள்
தண்ணீர்
இரண்டாயிரத்தின் பிற்பாதியில் எங்கள் ஊரில் மாதக் கணக்கில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. லாரி தண்ணீரும் கிடைக்காத நிலையில், ஊருக்கே தண்ணீர் தந்த கிணற்றை நினைத்துப் பார்க்கிறேன். வாய்க்கால் வரப்புகளைத் தாண்டி, ஒரு சிறு குன்றின் அருகில் இருந்த அக்கிணற்று நீருக்காக, சைக்கிளில், டி.வி.எஸ் எக்சலில் குடங்களை வைத்துக் கொண்டு ஊரே செல்லும் காட்சி கண் முன் தோன்றி மறைகிறது. ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய்.
புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.
கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.
புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.
கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.
உன் பெயர்
உன்னைப் பற்றி பாடப் போகும்
கவிதையொன்றுக்காக
வார்த்தைகளுக்கு
நேர்முகத் தேர்வு நடத்தினேன்
முற்றுப் புள்ளிக்கு
இடமளிக்காமல்
வந்து விழுந்த வார்த்தைகளில்
கழித்தது போக
மீதமிருப்பவை
எல்லா மொழிகளிலும்
உன் பெயர் மட்டுமே!
கவிதையொன்றுக்காக
வார்த்தைகளுக்கு
நேர்முகத் தேர்வு நடத்தினேன்
முற்றுப் புள்ளிக்கு
இடமளிக்காமல்
வந்து விழுந்த வார்த்தைகளில்
கழித்தது போக
மீதமிருப்பவை
எல்லா மொழிகளிலும்
உன் பெயர் மட்டுமே!
“தெரியவில்லை”
நானும் நண்பரும்
ஒரு பயணத்திலிருந்தோம்
நண்பர் என்றா சொன்னேன்?
ம்…
உற்சாகமான பயணமென்று
சொல்வதற்கில்லை
ஆனால் அதுதான் வழி
என்று சொல்லியிருந்தார்கள்
நீண்ட நெடுஞ்சாலையொன்றின்
ஓரத்தில்
“என்னை முத்தமிட்டுக்கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த அட்டையைப்
பிடித்துக் கொண்டு
ஒரு பெண் நின்றிருந்தாள்
அவளைப் பார்க்காமல்
வந்து விடுங்கள்
“அவள் பெயர் மாயை” என்றார் உடன் வந்தவர்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்கள்”
அவர் சென்றுவிட்டார்
சிறிது தயக்கத்துடந்தான் ஆரம்பித்தேன்
மெதுவாய்
ஒன்றாய்
இரண்டாய்
பின்
காலமொன்றை மறந்து
திரும்பி வந்து
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”
என்றார் நான் முன்னால் கூறிய நண்பர்
“தெரியவில்லை”
“நீங்கள் எங்கு சென்றீர்கள்?”
“தெரியவில்லை”
அதன் பின்
அவர் மீண்டும் போய்விட்டார்
நான்
அந்த அட்டையில்
சொல்லியிருந்தபடி
செய்யத் தொடங்கினேன்….
ஒரு பயணத்திலிருந்தோம்
நண்பர் என்றா சொன்னேன்?
ம்…
உற்சாகமான பயணமென்று
சொல்வதற்கில்லை
ஆனால் அதுதான் வழி
என்று சொல்லியிருந்தார்கள்
நீண்ட நெடுஞ்சாலையொன்றின்
ஓரத்தில்
“என்னை முத்தமிட்டுக்கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த அட்டையைப்
பிடித்துக் கொண்டு
ஒரு பெண் நின்றிருந்தாள்
அவளைப் பார்க்காமல்
வந்து விடுங்கள்
“அவள் பெயர் மாயை” என்றார் உடன் வந்தவர்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்கள்”
அவர் சென்றுவிட்டார்
சிறிது தயக்கத்துடந்தான் ஆரம்பித்தேன்
மெதுவாய்
ஒன்றாய்
இரண்டாய்
பின்
காலமொன்றை மறந்து
திரும்பி வந்து
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”
என்றார் நான் முன்னால் கூறிய நண்பர்
“தெரியவில்லை”
“நீங்கள் எங்கு சென்றீர்கள்?”
“தெரியவில்லை”
அதன் பின்
அவர் மீண்டும் போய்விட்டார்
நான்
அந்த அட்டையில்
சொல்லியிருந்தபடி
செய்யத் தொடங்கினேன்….
மனம் தொட்ட கவிதை
உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது கவிதைகள் கூறுங்கள் என்று நண்பர்கள் கேட்கும் பொழுது எனக்கு எதைச் சொல்வது இல்லை எவற்றைச் சொலவது என்று தெரியாமல் கஷ்டப் படுவேன். இதற்கு முக்கியக் காரணம் என் ஞாபக சக்தி. என்னால் ஒரு விசயத்தை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவே முடிவதில்லை. நான் எழுதியவற்றில் கூட என்னால் ஒன்றிரண்டைத் தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.பல வருடம் பழகிய நண்பர்களையெல்லாம் ஒரு சில ஆண்டுகள் பார்க்கவில்லை என்றால் யார் நீங்கள் என்று கேட்ட அனுபவமெல்லாம் உண்டு. இதனாலேயே இப்படி யாராவது கேட்டால் “அப்படி ஒன்னு ரெண்டுலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று சொல்லி சமாளிப்பேன். ஆனால் நகுலனின் இக்கவிதை என்றைக்கும் என் நினைவை விட்டு அகலும் என்று தோன்றவில்லை.
“எனக்கு யாருமில்லை நான் கூட” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.
இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,
ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது போலிருந்தது.
தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.
என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.
“எனக்கு யாருமில்லை நான் கூட” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.
இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,
ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது போலிருந்தது.
தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.
என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.
அஞ்சலி!
அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்
கம்பீரமான
அழகான
தன் மரணத்தைக் காட்ட
உடல் கிழிந்து இறந்த
ஒரு பெண்ணுடன்
அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்
“இங்குதான்
எல்லோரும்
பார்க்க
என் மரண நாடகம்
இனிதே நிறைவேறியது
அதோ
அங்கு
சிதிறிக் கிடப்பவை
என் இறுதி வேண்டுதல்கள்
இங்கிருந்து அவ்வளவு தூரமே
என் இறுதிப் பயணம்
பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
இவனும்
ஆனால்
கருணையுள்ளவன்
ஓட ஓட விரட்டியோ
கதறக் கதற குதறியோ
நடு ரோட்டில் வீசியோ
என்னைக் கொல்லவில்லை
எல்லோரும்
கதறினோம் பதறினோம்
என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்
‘விட்டுவிடு
என்று கெஞ்சியிருந்தால்
விட்டிருக்கும்
என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை’
உனக்கு
இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்” என்றான்
அவள் பேசவில்லை
ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
இன்றும் பேசவேயில்லை
இன்று
அங்கு வந்திருந்தான்
கம்பீரமான
அழகான
தன் மரணத்தைக் காட்ட
உடல் கிழிந்து இறந்த
ஒரு பெண்ணுடன்
அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்
“இங்குதான்
எல்லோரும்
பார்க்க
என் மரண நாடகம்
இனிதே நிறைவேறியது
அதோ
அங்கு
சிதிறிக் கிடப்பவை
என் இறுதி வேண்டுதல்கள்
இங்கிருந்து அவ்வளவு தூரமே
என் இறுதிப் பயணம்
பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
இவனும்
ஆனால்
கருணையுள்ளவன்
ஓட ஓட விரட்டியோ
கதறக் கதற குதறியோ
நடு ரோட்டில் வீசியோ
என்னைக் கொல்லவில்லை
எல்லோரும்
கதறினோம் பதறினோம்
என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்
‘விட்டுவிடு
என்று கெஞ்சியிருந்தால்
விட்டிருக்கும்
என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை’
உனக்கு
இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்” என்றான்
அவள் பேசவில்லை
ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
இன்றும் பேசவேயில்லை
நம்பிக்கை
நிகழ்ச்சி முடிந்து
எல்லோரும் போய்விட்டார்கள்
இன்னமும் கலைக்கப்படாத
மேடையில் நின்றுகொண்டு பார்க்கிறேன்
வந்திருந்த பார்வையாளர்கள்
அவர்களால் முடிந்த
ஏதோ ஒன்றை
விட்டுத்தான் போயிருக்கிறார்கள்
சம்பிரதாய கைத்தட்டல்கள்
சிறு சிறு
புன்னகைகள்
ஆராவார விசில் சத்தங்கள்
தின்று விட்டு
போட்ட ஏப்பங்கள்
கொட்டாவியுடன்
எடுத்த
கைப்பேசி அழைப்புகள்
நடு நடுவே கிடந்த
ஆபாச வார்த்தைகள்
என
இன்றைய தினம்
அரங்கு முழுவதும்
நிறைவாய்
சிதறிக் கிடக்கிறது
- ஒத்திகைகள்
எப்பொழுதும்
நம்பிக்கைத் தருவனவாகவே
முடிகின்றன
மூடர்க் கூடம்!
அதிகாலை நான்கு மணிக்கே
கடையைத் திறந்துவிட்டேன்
நான் ஊருக்குப் புதுசு
தொழிலுக்கும் புதுசு
ஆரத்தி எடுக்க
ஆளை நிறுத்தி
வருபவர்களை எதிர்பார்த்து
வாசலில் நின்றேன்
விசித்திர ஊர்
எல்லோரும் விடிந்து
மூன்று மணி நேரம் கழித்து
வரத் தொடங்கினர்
வந்த எல்லோரும்
என் கடைப் பக்கத்திலேயே
கடை போட்டனர்
என்னைப் போலவே
ஆரத்தி எடுக்கும் ஆளுடன்
வாசலில் நின்றனர்
அதிலொருவர்
என்னைப் பார்த்து
ஏதோ கேட்டார்
ஒருவர்
என்னைப் பற்றி
இன்னொருவரிடம் ஏதோ சொல்லத்தொடங்கினார்
மற்றொருவர்
என்னைத் திட்டத் தொடங்கினார்
ஒன்றாக சேர்ந்து
ஒரு கூட்டம் சிரிக்கத் தொடங்கியது
ஓடிவிடு என்றார் ஒருவர்
ஒருவர் கடைசி வரை
என் பக்கம் திரும்பவில்லை
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஒருவருக்கும்
போணி ஆகவில்லை
எனினும்
அன்றைய நாள்
இவ்வாறாக முடிய
கை குலுக்கிக் கொண்டு
விடைப் பெற்றனர்
இப்படியே
இரண்டு நாட்கள்
காலியான
தெருவில்
கைக்கலப்புகளுடனும்
கைக்குலுக்கள்களுடனும்
போயின
எனக்கு
மெல்ல
இந்த வியாபாரம்
புரியத் தொடங்கியது
மறு நாள்
பத்து மணிக்கே
விடிந்தது!
கடையைத் திறந்துவிட்டேன்
நான் ஊருக்குப் புதுசு
தொழிலுக்கும் புதுசு
ஆரத்தி எடுக்க
ஆளை நிறுத்தி
வருபவர்களை எதிர்பார்த்து
வாசலில் நின்றேன்
விசித்திர ஊர்
எல்லோரும் விடிந்து
மூன்று மணி நேரம் கழித்து
வரத் தொடங்கினர்
வந்த எல்லோரும்
என் கடைப் பக்கத்திலேயே
கடை போட்டனர்
என்னைப் போலவே
ஆரத்தி எடுக்கும் ஆளுடன்
வாசலில் நின்றனர்
அதிலொருவர்
என்னைப் பார்த்து
ஏதோ கேட்டார்
ஒருவர்
என்னைப் பற்றி
இன்னொருவரிடம் ஏதோ சொல்லத்தொடங்கினார்
மற்றொருவர்
என்னைத் திட்டத் தொடங்கினார்
ஒன்றாக சேர்ந்து
ஒரு கூட்டம் சிரிக்கத் தொடங்கியது
ஓடிவிடு என்றார் ஒருவர்
ஒருவர் கடைசி வரை
என் பக்கம் திரும்பவில்லை
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஒருவருக்கும்
போணி ஆகவில்லை
எனினும்
அன்றைய நாள்
இவ்வாறாக முடிய
கை குலுக்கிக் கொண்டு
விடைப் பெற்றனர்
இப்படியே
இரண்டு நாட்கள்
காலியான
தெருவில்
கைக்கலப்புகளுடனும்
கைக்குலுக்கள்களுடனும்
போயின
எனக்கு
மெல்ல
இந்த வியாபாரம்
புரியத் தொடங்கியது
மறு நாள்
பத்து மணிக்கே
விடிந்தது!
நீதிக் கவிதை!
நீள் கவிதையொன்றை எழுதி
நீல நிற ஆற்றைக்
கடந்து கொண்டிருந்தேன்
“ஆறு” – இங்கு குறியீடாக வருகிறது
யாருமே பாத்திராத ஒன்றுக்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று சண்டையிட்டுகொண்டிருந்த இருவர்
என் கவிதையைப் பிடுங்கி
குறியீட்டில் எறிந்தனர்
தவறி விழும் பொருட்களை
எடுத்துக் கொடுக்கும் தேவதையிடம்
வேண்டினேன் வேண்டினேன் வேண்டிக்கொண்டேயிருந்தேன்
ஆதர்சனம் என்று
யாரையோ சொல்லிக்கொண்டு
தர்சனம் கொடுத்தாள் தேவதை
நான் முத்தமிட்டால்
இந்த ஆறே கரைந்து போகும்
மரியாதயாய் எடுத்துத் தா என்றேன்
புரியவில்லை என்றாள்
அதைத்தான் எடுத்துத் தா என்றேன்
புரிந்து கொண்டாள்
மூன்றெழுத்தில் முடியும் கவிதையொன்றை
எடுத்து வந்தாள்
அய்யோ
இது இல்லையென்றேன்
அதையே
முன்று வரியாக்கித் தந்தாள்
இருக்கலாம் என்றேன்
‘பரமபிதா, சாத்தானே, முலை, வேசி,
கொலை, கொடூர பயங்கரம்’
நிறைந்த ஒன்றைத் தந்தாள்
பார்க்க அப்படித்தான் தோன்றுகிறதென்றேன்
ஒரே எழுத்தில் முடியும்
ஒன்பது வரிகளைக் கொண்ட ஒன்றையும்
மூன்று மூன்றுப் புள்ளிகளுக்கிடையில்
சில வார்த்தைகள் கொண்ட ஒன்றையும்
எடுத்து வந்தாள்
நிச்சயமாய் சொல்வதற்கில்லை என்றேன்
சோர்ந்து போனவளாய்
கொட்டாவி விட்டாள்
ஆஹா அருமை என்றேன்
‘போடா மயிறு’ என்றாள்
கவிதை, கவிதை
எனக் கத்தினேன்
நீதி:
யாரறிவார்
எது
என்ன என்பதை
எனவே
“உனக்கான கவிதையை
நீயே எழுதிக்கொள்”
நீல நிற ஆற்றைக்
கடந்து கொண்டிருந்தேன்
“ஆறு” – இங்கு குறியீடாக வருகிறது
யாருமே பாத்திராத ஒன்றுக்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று சண்டையிட்டுகொண்டிருந்த இருவர்
என் கவிதையைப் பிடுங்கி
குறியீட்டில் எறிந்தனர்
தவறி விழும் பொருட்களை
எடுத்துக் கொடுக்கும் தேவதையிடம்
வேண்டினேன் வேண்டினேன் வேண்டிக்கொண்டேயிருந்தேன்
ஆதர்சனம் என்று
யாரையோ சொல்லிக்கொண்டு
தர்சனம் கொடுத்தாள் தேவதை
நான் முத்தமிட்டால்
இந்த ஆறே கரைந்து போகும்
மரியாதயாய் எடுத்துத் தா என்றேன்
புரியவில்லை என்றாள்
அதைத்தான் எடுத்துத் தா என்றேன்
புரிந்து கொண்டாள்
மூன்றெழுத்தில் முடியும் கவிதையொன்றை
எடுத்து வந்தாள்
அய்யோ
இது இல்லையென்றேன்
அதையே
முன்று வரியாக்கித் தந்தாள்
இருக்கலாம் என்றேன்
‘பரமபிதா, சாத்தானே, முலை, வேசி,
கொலை, கொடூர பயங்கரம்’
நிறைந்த ஒன்றைத் தந்தாள்
பார்க்க அப்படித்தான் தோன்றுகிறதென்றேன்
ஒரே எழுத்தில் முடியும்
ஒன்பது வரிகளைக் கொண்ட ஒன்றையும்
மூன்று மூன்றுப் புள்ளிகளுக்கிடையில்
சில வார்த்தைகள் கொண்ட ஒன்றையும்
எடுத்து வந்தாள்
நிச்சயமாய் சொல்வதற்கில்லை என்றேன்
சோர்ந்து போனவளாய்
கொட்டாவி விட்டாள்
ஆஹா அருமை என்றேன்
‘போடா மயிறு’ என்றாள்
கவிதை, கவிதை
எனக் கத்தினேன்
நீதி:
யாரறிவார்
எது
என்ன என்பதை
எனவே
“உனக்கான கவிதையை
நீயே எழுதிக்கொள்”
இரவு
இரவுகளை விற்கும்
கடைக்குச் சென்றிருந்தேன்
பல வகையான
இரவுகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்
தூக்கத்தைத் தரும் இரவு…
கனவுகளையும் சேத்துத்தரும் இரவு
நிலாவோடு இரவு
நட்சத்திரங்கள் பூத்த இரவு
மழை இரவு
மூடி மறைத்து
அதிக விலைக்கு விற்கப்படும்
முதலிரவு
என பலவகையான இரவுகள்.
கடைசியைத் தவிர்த்து
எல்லாவற்றிலும்
ஒன்று வாங்கிவந்து
ஒரு வருடமாயிற்று
பிரிக்கப் படாத
புத்தகங்களாய்
கிடக்கும் அவைகளை
யாரேனும்
பாதி விலைக்கு வாங்க்கிக்கொள்கிறீர்களா
- இப்படிக்கு
பி.பி.ஒ எம்ப்ளாயி
கடைக்குச் சென்றிருந்தேன்
பல வகையான
இரவுகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்
தூக்கத்தைத் தரும் இரவு…
கனவுகளையும் சேத்துத்தரும் இரவு
நிலாவோடு இரவு
நட்சத்திரங்கள் பூத்த இரவு
மழை இரவு
மூடி மறைத்து
அதிக விலைக்கு விற்கப்படும்
முதலிரவு
என பலவகையான இரவுகள்.
கடைசியைத் தவிர்த்து
எல்லாவற்றிலும்
ஒன்று வாங்கிவந்து
ஒரு வருடமாயிற்று
பிரிக்கப் படாத
புத்தகங்களாய்
கிடக்கும் அவைகளை
யாரேனும்
பாதி விலைக்கு வாங்க்கிக்கொள்கிறீர்களா
- இப்படிக்கு
பி.பி.ஒ எம்ப்ளாயி
“கானகன்”
கானகன்
லக்ஷ்மி சரவணகுமார் அவர்கள் எழுதிய நாவல். ஆசிரியரின் பெயரை இந்நாவலுக்கு முன் கேள்விப் பட்டிருந்தாலும், அவரின் படைப்புகளை படிப்பது இதுவே முதல் முறை. அகநாழிகை பதிப்பகத்தில் நடந்த கானகன் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தேன். அதுவே இப்புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவ்வளவு காலம் கழித்துப் படிக்கவும் காரணம். ஆம். மூத்த எழுத்தாளர் சாரு அவர்கள் படு பயங்கரமாக அறிமுகப் படுத்தி வைத்தார். சாருவின் மதிப்புரைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்ட காரணத்தால் மனதில் எழுந்த முன் முடிவுகளை ஒத்தி வைக்க சற்று கால தாமதமாகிவிட்டது.
இந்நாவலுக்கு குட் ரீட்ஸ் தளத்தில் நான் நான்கு நட்சத்திரங்கள் குடுத்துள்ளேன் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
கதையை மிகக் குறுகிய காலக்கட்டத்திற்குள் எழுதி முடித்ததாகவும், இன்னும் கூட எழுதப்படாமல் சிலவை விட்டுப் போயிருக்கலாம் என்று ஆசிரியர் அறிமுகக் கூட்டத்தில் சொன்னார். பின்பு நாவலைப் பற்றி எழுதப்பட்ட/பேசப்பட்ட விமர்சனங்களில் முடிவு மிகவும் நாடகத்தனமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. அதையே நானும் கூறுகிறேன். எனக்கும் அவ்வாறே தோன்றியது.இவை எல்லாவற்றையும் தவிர்த்து என்னால் இந்த நாவலை ரசிக்க முடிந்தது.
கதையின் கரு (ஒன்லைன்) வாசி, தங்கப்பன்(அப்பா, மகன்) உறவுச் சிக்கல் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கதை முழுவதும் வாசிக்கையில் தோன்றிய எண்ணங்கள், படித்து முடித்த பின்பும் எஞ்சி நிற்பவை: மனிதர்கள் காட்டு வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் பழங்குடியினர் மற்றும் காட்டு உயிரினகங்கள் துரத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
இன்னும் சற்று யோசித்தால் : கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல் வேட்டயாடி, தன் வேட்டை மிருகங்களுக்கே பலியாவான். ஆனால் நாவல் முழுவதும் திரும்பத் திரும்ப காட்டிற்கும், காட்டு உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு,அவையின் அழிவு அழிவைத் தரும் என்று சொல்லப்படுவதால் முதலில் கூறிய எண்ணமே எஞ்சி நிற்கிறது.
சில மனதிற்கு ஒட்டாத வரிகள்:
பேருந்து நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிச் சென்றது...
செத்த குரங்குகள் நிம்மத்யாய் கிடந்தன...
புலி குன்று போல் கிடந்தது( புலியின் பிரம்மாண்ட உருவை இவ்வரி கண் முன் நிறுத்தவில்லை,அதற்கு முன்புள்ள வரிகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது )
இந் நாவல் காட்டும் மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கை முறை ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்கு தடையற்ற, தொய்வற்ற ஓட்டம் இந்நாவலின் பலம். மனிதன் ஒரு கரையான் என்பதும், ஆபத்து காலங்களில் தன் நலனுக்காக எதையும் இழக்கவோ/அழிக்கவோ துணிவான் என்பதை ஆழமாக பதிவு செய்கிறது. (ஜெ.மோ வின்தளத்தில் ஒரு வாசகர் இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்: தன் மகனுடன் வெளியில் சென்ற அவர் ஆபத்தொன்றில் தன் மகனை விட்டு விட்டு தான் தப்பிக்க நினைத்ததாய் போகும் அக்கடிதம். ஒரு ஆணின் குணம் என்று அக்கடிதம் அலசப்பட்டிருக்கும். இங்கு அக்கடிதத்தை நினைவு கூறுகிறேன்)
மலைச்சொல் பதிப்பகம்
விலை: ரூபாய் 200
லக்ஷ்மி சரவணகுமார் அவர்கள் எழுதிய நாவல். ஆசிரியரின் பெயரை இந்நாவலுக்கு முன் கேள்விப் பட்டிருந்தாலும், அவரின் படைப்புகளை படிப்பது இதுவே முதல் முறை. அகநாழிகை பதிப்பகத்தில் நடந்த கானகன் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தேன். அதுவே இப்புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவ்வளவு காலம் கழித்துப் படிக்கவும் காரணம். ஆம். மூத்த எழுத்தாளர் சாரு அவர்கள் படு பயங்கரமாக அறிமுகப் படுத்தி வைத்தார். சாருவின் மதிப்புரைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்ட காரணத்தால் மனதில் எழுந்த முன் முடிவுகளை ஒத்தி வைக்க சற்று கால தாமதமாகிவிட்டது.
இந்நாவலுக்கு குட் ரீட்ஸ் தளத்தில் நான் நான்கு நட்சத்திரங்கள் குடுத்துள்ளேன் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
கதையை மிகக் குறுகிய காலக்கட்டத்திற்குள் எழுதி முடித்ததாகவும், இன்னும் கூட எழுதப்படாமல் சிலவை விட்டுப் போயிருக்கலாம் என்று ஆசிரியர் அறிமுகக் கூட்டத்தில் சொன்னார். பின்பு நாவலைப் பற்றி எழுதப்பட்ட/பேசப்பட்ட விமர்சனங்களில் முடிவு மிகவும் நாடகத்தனமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. அதையே நானும் கூறுகிறேன். எனக்கும் அவ்வாறே தோன்றியது.இவை எல்லாவற்றையும் தவிர்த்து என்னால் இந்த நாவலை ரசிக்க முடிந்தது.
கதையின் கரு (ஒன்லைன்) வாசி, தங்கப்பன்(அப்பா, மகன்) உறவுச் சிக்கல் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கதை முழுவதும் வாசிக்கையில் தோன்றிய எண்ணங்கள், படித்து முடித்த பின்பும் எஞ்சி நிற்பவை: மனிதர்கள் காட்டு வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் பழங்குடியினர் மற்றும் காட்டு உயிரினகங்கள் துரத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
இன்னும் சற்று யோசித்தால் : கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல் வேட்டயாடி, தன் வேட்டை மிருகங்களுக்கே பலியாவான். ஆனால் நாவல் முழுவதும் திரும்பத் திரும்ப காட்டிற்கும், காட்டு உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு,அவையின் அழிவு அழிவைத் தரும் என்று சொல்லப்படுவதால் முதலில் கூறிய எண்ணமே எஞ்சி நிற்கிறது.
சில மனதிற்கு ஒட்டாத வரிகள்:
பேருந்து நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிச் சென்றது...
செத்த குரங்குகள் நிம்மத்யாய் கிடந்தன...
புலி குன்று போல் கிடந்தது( புலியின் பிரம்மாண்ட உருவை இவ்வரி கண் முன் நிறுத்தவில்லை,அதற்கு முன்புள்ள வரிகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது )
இந் நாவல் காட்டும் மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கை முறை ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்கு தடையற்ற, தொய்வற்ற ஓட்டம் இந்நாவலின் பலம். மனிதன் ஒரு கரையான் என்பதும், ஆபத்து காலங்களில் தன் நலனுக்காக எதையும் இழக்கவோ/அழிக்கவோ துணிவான் என்பதை ஆழமாக பதிவு செய்கிறது. (ஜெ.மோ வின்தளத்தில் ஒரு வாசகர் இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்: தன் மகனுடன் வெளியில் சென்ற அவர் ஆபத்தொன்றில் தன் மகனை விட்டு விட்டு தான் தப்பிக்க நினைத்ததாய் போகும் அக்கடிதம். ஒரு ஆணின் குணம் என்று அக்கடிதம் அலசப்பட்டிருக்கும். இங்கு அக்கடிதத்தை நினைவு கூறுகிறேன்)
மலைச்சொல் பதிப்பகம்
விலை: ரூபாய் 200
Subscribe to:
Comments (Atom)