Sunday, October 5, 2014

நம்பிக்கை


நிகழ்ச்சி முடிந்து
 எல்லோரும் போய்விட்டார்கள்
 இன்னமும் கலைக்கப்படாத
 மேடையில் நின்றுகொண்டு பார்க்கிறேன்

வந்திருந்த பார்வையாளர்கள்
 அவர்களால் முடிந்த
 ஏதோ ஒன்றை
 விட்டுத்தான் போயிருக்கிறார்கள்

சம்பிரதாய கைத்தட்டல்கள்
 சிறு சிறு
 புன்னகைகள்
 ஆராவார விசில் சத்தங்கள்
 தின்று விட்டு
 போட்ட ஏப்பங்கள்
 கொட்டாவியுடன்
 எடுத்த
 கைப்பேசி அழைப்புகள்
 நடு நடுவே கிடந்த
 ஆபாச வார்த்தைகள்
 என
 இன்றைய தினம்
 அரங்கு முழுவதும்
 நிறைவாய்
 சிதறிக் கிடக்கிறது

- ஒத்திகைகள்
 எப்பொழுதும்
 நம்பிக்கைத் தருவனவாகவே
 முடிகின்றன

No comments:

Post a Comment