Friday, October 10, 2014

விடியல்

எல்லாம் முடிந்துவிட்டது
 அல்லது
 எதுவுமே நடக்கவில்லை
 என்ற பாவனையுடந்தான்
 ஒவ்வொரு நாளும்
 விடிகிறது
***

இந்தப் பகலில் ஏறி
 அக்கரையில் இருக்கும்
 என் தம்பியைப்
 பார்க்கச் செல்லவேண்டும்

இரவில்
 திரும்பிவிடலாம்
***

துகிலுறிக்கிறார்கள்
 இல்லை
 துணியைச் சுற்றிவிடுகிறார்கள்
 ஆண்கள்
 எப்பொழுதும்
 பெண்களுக்காய்
 அடுப்பங்கரையிலே
 ஒரு உலகைச் சமைக்கிறார்கள்
***

ஒளியாலும்
 இருளாலும்
 மூடப்பட்டிருக்கும்
 உலகின் ஆழத்தில்
 ஓடுவது
 ஒன்றே

No comments:

Post a Comment