Sunday, October 5, 2014

இரவு

இரவுகளை விற்கும்
கடைக்குச் சென்றிருந்தேன்
பல வகையான‌
இரவுகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்
தூக்கத்தைத் தரும் இரவு…
கனவுகளையும் சேத்துத்தரும் இரவு
நிலாவோடு இரவு
நட்சத்திரங்கள் பூத்த இரவு
மழை இரவு
மூடி மறைத்து
அதிக விலைக்கு விற்கப்படும்
முதலிரவு
என பலவகையான இரவுகள்.
கடைசியைத் தவிர்த்து
எல்லாவற்றிலும்
ஒன்று வாங்கிவந்து
ஒரு வருடமாயிற்று
பிரிக்கப் படாத‌
புத்தகங்களாய்
கிடக்கும் அவைகளை
யாரேனும்
பாதி விலைக்கு வாங்க்கிக்கொள்கிறீர்களா
- இப்படிக்கு
பி.பி.ஒ எம்ப்ளாயி

No comments:

Post a Comment