எனக்குப் பிடித்த விசயங்களைக்
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது
*~*
எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை
No comments:
Post a Comment