Thursday, October 9, 2014

மழைக் குறிப்புகள்…

என்
வாழ்க்கைப் புத்தகத்தின்
கருப்பு பக்கங்களை
ஒவ்வொரு முறையும்
அழித்துத் தருகிறது
இந்த
மழை
*
உதிரும்போது
மலரும் பூ
மழை
*
இடியுடன் கூடய மழை
காதலர்களுக்கென‌
ப்ரத்யேகமானது
*
தொட்டாச் சிணுங்கிகள்
பாவமென‌
குடைக்கு வெளியே
பெய்கிறது
மழை
*
இக்காலைப் பொழுதில்
அடுத்த மழையில்
சந்திப்போமென‌
பிரிந்து செல்கின்றன‌
பறவைகள்
*
நானில்லா நேரத்தில்
வந்து போன‌
மழையை
ரகசியமாய்
படம் பிடித்து வைத்திருக்கும்
என் அறையின்
மின் விசிறியை
ஓடவிட்டு
கனவில்
நனையப் போகிறேன்

மழை
பெய்யட்டும்…!

No comments:

Post a Comment