புற்களின் மீது
நடப்பதுபோல்
சுகம் தருகிறது
தற்கொலை செய்துகொள்ளவேண்டும்
என்ற எண்ணம்
ஒவ்வொரு புல்லின்மீதும்
ஒரு துளிக் கண்ணீரை
வைக்க
அழகாய் இருக்கிறது
மரணத்தின் வாசல்
புற்களால்
பின்னப்பட்ட கயிற்றில்
தூக்கிட்டுக் கொள்ளவேண்டும்
ஒவ்வொரு மரணத்திற்கும்
ஒரு நிறமுண்டு
புல்லின் நிறம்
எனது
தற்கொலை எண்ணங்கள்
எப்பொழுதும் அழகானவை
அது
எல்லா மனிதர்களும்
ஒரு முறையேனும்
போய்வரும் புல்வெளிதேசம்!
No comments:
Post a Comment