என் அறையில்
சுற்றிக்கொண்டிருக்கிறது
பதிமூன்று வயது
பாம்பொன்று
தினமும் இரவில்
என்னை விழுங்கப் பார்க்கிறது
ஒவ்வொருமுறையும்
"இதெல்லாம் சகஞம்"
என்று கூறி தப்பித்து வருகிறேன்
ஆன்மிகத்தில்
இசையில்
இலக்கியத்தில்
விளையாட்டில்
தத்துவத்தில்
ஏதோ ஒன்றில்
தொலைந்தால் சரி
என்று பார்க்கிறேன்
ம்ஹும்...
நான் துப்பிய எச்சிலில்
பிறந்த பாம்பென்பதால்
இதுவரை
நானும் சாகவில்லை
அப்பாம்பும் சாகவில்லை
No comments:
Post a Comment