Tuesday, October 14, 2014

இம்மார்டல் ஸ்னேக்

என் அறையில்
சுற்றிக்கொண்டிருக்கிறது
பதிமூன்று வயது
பாம்பொன்று

தினமும் இரவில்
என்னை விழுங்கப் பார்க்கிறது

ஒவ்வொருமுறையும்
"இதெல்லாம் சகஞம்"
என்று கூறி தப்பித்து வருகிறேன்

ஆன்மிகத்தில்
இசையில்
இலக்கியத்தில்
விளையாட்டில்
தத்துவத்தில்
ஏதோ ஒன்றில்
தொலைந்தால் சரி
என்று பார்க்கிறேன்

ம்ஹும்...

நான் துப்பிய எச்சிலில்
பிறந்த பாம்பென்பதால்
இதுவரை
நானும் சாகவில்லை
அப்பாம்பும் சாகவில்லை

No comments:

Post a Comment