Sunday, October 5, 2014

மூடர்க் கூடம்!

அதிகாலை நான்கு மணிக்கே
கடையைத் திறந்துவிட்டேன்
நான் ஊருக்குப் புதுசு
தொழிலுக்கும் புதுசு
ஆரத்தி எடுக்க‌
ஆளை நிறுத்தி
வருபவர்களை எதிர்பார்த்து
வாசலில் நின்றேன்
விசித்திர ஊர்
எல்லோரும் விடிந்து
மூன்று மணி நேரம் கழித்து
வரத் தொடங்கினர்
வந்த எல்லோரும்
என் கடைப் பக்கத்திலேயே
கடை போட்டனர்
என்னைப் போலவே
ஆரத்தி எடுக்கும் ஆளுடன்
வாசலில் நின்றனர்
அதிலொருவர்
என்னைப் பார்த்து
ஏதோ கேட்டார்
ஒருவர்
என்னைப் பற்றி
இன்னொருவரிடம் ஏதோ சொல்லத்தொடங்கினார்
மற்றொருவர்
என்னைத் திட்டத் தொடங்கினார்
ஒன்றாக சேர்ந்து
ஒரு கூட்டம் சிரிக்கத் தொடங்கியது
ஓடிவிடு என்றார் ஒருவர்
ஒருவர் கடைசி வரை
என் பக்கம் திரும்பவில்லை
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஒருவருக்கும்
போணி ஆகவில்லை
எனினும்
அன்றைய நாள்
இவ்வாறாக முடிய‌
கை குலுக்கிக் கொண்டு
விடைப் பெற்றனர்
இப்படியே
இரண்டு நாட்கள்
காலியான‌
தெருவில்
கைக்கலப்புகளுடனும்
கைக்குலுக்கள்களுடனும்
போயின
எனக்கு
மெல்ல‌
இந்த வியாபாரம்
புரியத் தொடங்கியது
மறு நாள்
பத்து மணிக்கே
விடிந்தது!

No comments:

Post a Comment